சர்வதேச வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் இருந்து 7-ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அறிவிப்பதை நம்புகிறேன் என இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக நேற்று தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரிவித்தார். அவர் ஓய்வு பெரும் செய்தி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
எல்லா நேரத்திலும் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும், இந்தியாவுக்காக விளையாடிய மிகச் சிறந்த விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருக்கும் தோனி, தனது சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முழுவதும் 7 -ம் நம்பர் ஜெர்சியை அணிந்திருந்தார்.
இந்தநிலையில், முன்னாள் இந்திய கேப்டனான தோனியை கவுரவிப்பதற்காக, அவர் அணிந்த 7-ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அறிவிக்கும் என நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் வலியுறுத்தினார். மேலும், தோனியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த பதிவில், உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்குப் பிறகு எடுக்கப்பட்ட கடைசி புகைப்படம் இதுதான்எனவும், அந்த பயணத்தில் பல நினைவுகள் உள்ளதாகவும், சர்வதேச வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் இருந்து 7-ம் நம்பர் ஜெர்சிக்கு பி.சி.சி.ஐ. ஓய்வு அறிவிக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, உங்கள் வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்ஸுக்கு வாழ்த்துக்கள் எனவும், உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் இருக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…