நெகிழ்ச்சி சம்பவம்..! பணம் வேண்டாம் என கூறிய இந்திய டிரைவர் ..! விருந்து வைத்த பாக் வீரர்கள் !

Default Image

ஆஸ்திரேலியாவிற்கு பாகிஸ்தான் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது.முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. போட்டியில் தோல்வி அடைந்தாலும் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் யாஷிர் ,நாசிம் கான்  உள்ளிட்ட வீரர்கள் கால் டாக்சியில் ஒரு ஹோட்டலுக்கு சென்று உள்ளனர். பாகிஸ்தான் வீரர்கள் சென்ற அந்த கால் டாக்ஸி ஓட்டிய டிரைவர் இந்தியர்.
டாக்ஸியில் ஏறி அனைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என தெரிந்து கொண்ட இந்திய கால் டாக்ஸி ஓட்டுனர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இருந்து பணம் எதுவும் வேண்டாம் என கூறியுள்ளார். உடனே பாகிஸ்தான் வீரர்கள் அந்த இந்திய கால் டாக்ஸி ஓட்டுனரை தாங்கள் சாப்பிட சென்ற ஹோட்டலுக்கு அழைத்து சென்று விருந்து வைத்து உள்ளனர்.
இதை ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜான்சனிடம் போட்டியின்போது வர்ணணையாளர் அலிசன் இது குறித்து கூற மற்ற அனைவருக்கும் இந்த சம்பவம் தெரிய வந்தது . தற்போது உணவகத்தில் டாக்ஸி ஓட்டுனருடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இருக்கும் புகைப்படம் பரவி வருகிறது.
இதனால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ரசிகர்கள் பலர் பாகிஸ்தான் வீரர்களுக்கும் , டாக்ஸி ஓட்டுனருக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்