பிரபல வீரர் கவுரவ் கில்லின் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

Published by
Surya

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் இந்திய தேசிய ரேலி என்ற கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த பந்தயம், இந்தியா முழுவதும் ஆறு சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இந்த பந்தயத்தின் முதல் மற்றும் இரண்டாம் சுற்று, தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் கோவையில் நடைபெற்று வந்தது.

இதனையடுத்து மூன்றாம் சுற்று போட்டியானது, ராஜஸ்தானில் உள்ள பார்மனில் நடைபெற்றது. இந்த போட்டியில் 53 அணிகள் பதிவு செய்தது. இந்நிலையில், தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வந்த டெல்லியை சேர்ந்த பிரபல வீரான 37 வயதான கவுரவ் கில். அவரும் அந்த போட்டியில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில், கில்லின் கார் சென்ற பொது விபத்தில் சிக்கியது. 145 கீ.மீ. வேகத்தில் சென்ற கார் வளைவில் திருபோது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

Image result for கவுரவ் கில்

இதில் அந்த மோட்டார் சைக்கிலில் பயணித்த அந்த பகுதியை சேர்ந்த நரேந்திரா, அவரின் மனைவி புஷ்பா மற்றும் இவர்களில் மகள் ஜிஜேந்திரா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும், காரை ஓட்டிய கவுரவ் கில்லுக்கு விலா பகுதியில் காயம் அடைந்தார். அவரை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த பந்தயம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ்ன் தலைவர் பிரித்விராஜ் கூறுகையில்; “கார்பந்தயம் காரணமாக இந்த பகுதியை எங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து இருந்தோம். இந்த சாலை தடை செய்யப்பட்டிருப்பதால், யாரும் வர வேண்டாம் என கடந்த 15 நாட்களாக கூறி வந்தோம். மோட்டார் சைக்கிளில் வந்த நரேந்திரா, எங்களது பாதுகாப்பு ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ததுடன், இரும்பு தடுப்பை உடைத்துக் கொண்டு பந்தய பாதைக்குள் நுழைந்ததால் விபத்தில் சிக்கி இறந்து விட்டார்.

அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்து நிகழ்ந்து விட்டது. கவுரவ் கில் முடிந்த வரை பிரேக் போட்டு காரை நிறுத்த முயற்சித்தார். ஆனால் அதிவேகம் காரணமாக ஒன்றும் செய்ய இயலாமல் போய் விட்டது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார். கவுரவ் கில், சமீபத்தில் இந்திய அரசிடம் அர்ஜுனா விருதை பெற்றார். மேலும், இந்த விருதைப்பெற்ற முதல் கார் பந்தைய வீரர் இவரே ஆவர்.

Published by
Surya

Recent Posts

காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை! உதவி எண்கள் இதோ…

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…

17 minutes ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

2 hours ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

4 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

5 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

12 hours ago