பிரபல வீரர் கவுரவ் கில்லின் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

Published by
Surya

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் இந்திய தேசிய ரேலி என்ற கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த பந்தயம், இந்தியா முழுவதும் ஆறு சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இந்த பந்தயத்தின் முதல் மற்றும் இரண்டாம் சுற்று, தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் கோவையில் நடைபெற்று வந்தது.

இதனையடுத்து மூன்றாம் சுற்று போட்டியானது, ராஜஸ்தானில் உள்ள பார்மனில் நடைபெற்றது. இந்த போட்டியில் 53 அணிகள் பதிவு செய்தது. இந்நிலையில், தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வந்த டெல்லியை சேர்ந்த பிரபல வீரான 37 வயதான கவுரவ் கில். அவரும் அந்த போட்டியில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில், கில்லின் கார் சென்ற பொது விபத்தில் சிக்கியது. 145 கீ.மீ. வேகத்தில் சென்ற கார் வளைவில் திருபோது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

Image result for கவுரவ் கில்

இதில் அந்த மோட்டார் சைக்கிலில் பயணித்த அந்த பகுதியை சேர்ந்த நரேந்திரா, அவரின் மனைவி புஷ்பா மற்றும் இவர்களில் மகள் ஜிஜேந்திரா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும், காரை ஓட்டிய கவுரவ் கில்லுக்கு விலா பகுதியில் காயம் அடைந்தார். அவரை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த பந்தயம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ்ன் தலைவர் பிரித்விராஜ் கூறுகையில்; “கார்பந்தயம் காரணமாக இந்த பகுதியை எங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து இருந்தோம். இந்த சாலை தடை செய்யப்பட்டிருப்பதால், யாரும் வர வேண்டாம் என கடந்த 15 நாட்களாக கூறி வந்தோம். மோட்டார் சைக்கிளில் வந்த நரேந்திரா, எங்களது பாதுகாப்பு ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ததுடன், இரும்பு தடுப்பை உடைத்துக் கொண்டு பந்தய பாதைக்குள் நுழைந்ததால் விபத்தில் சிக்கி இறந்து விட்டார்.

அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்து நிகழ்ந்து விட்டது. கவுரவ் கில் முடிந்த வரை பிரேக் போட்டு காரை நிறுத்த முயற்சித்தார். ஆனால் அதிவேகம் காரணமாக ஒன்றும் செய்ய இயலாமல் போய் விட்டது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார். கவுரவ் கில், சமீபத்தில் இந்திய அரசிடம் அர்ஜுனா விருதை பெற்றார். மேலும், இந்த விருதைப்பெற்ற முதல் கார் பந்தைய வீரர் இவரே ஆவர்.

Published by
Surya

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

12 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

13 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

13 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

14 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

16 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

17 hours ago