யாரும் சொல்லாததை அவர் சொன்னார் .! ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க வேண்டுகோள் விடுத்த சச்சின்.!

Published by
murugan
  • சச்சினிடம் நீங்கள் பேட்டிங் செய்யும்போது உங்கள் கையில் உள்ள எல்போ கார்டு சிரமத்தை தருகிறது. அதை ரீ டிசைன் செய்தால் நல்ல இருக்கும் எனக்கூறினார்.
  • யாரும் சொல்லாததை அவர் சொன்னார்.எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன என சச்சின் கூறினார்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் சென்னையில் நடந்த ஒரு டெஸ்ட் தொடரின்போது தனக்கு நடந்த  அனுபவத்தை சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறி நெட்டிசன்களிடம் உதவி கேட்டுள்ளார்.

அதில் “நான் சென்னை டெஸ்ட் தொடரின்போது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தேன். அப்போது நான் தங்கி இருந்த ஹோட்டலில் காபி ஆர்டர் செய்தேன் . அப்போது காபியை கொண்டுவந்த ஹோட்டல் ஊழியர் ஒருவர் , சார் நான் உங்களிடம் ஓன்று கேட்கலாமா என கேட்டார். அதற்கு நான் சொல்லுங்கள் என கூறினேன்.

அந்த ஊழியர் நான் உங்கள் ரசிகன். உங்கள் பேட்டிங் ஸ்டைலை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்கள் பேட்டிங் செய்யும்போது உங்கள் கையில் உள்ள எல்போ கார்டு சிரமத்தை தருகிறது. அதை ரீ டிசைன் செய்தால் நல்ல இருக்கும்” என கூறினார்.

யாரும் சொல்லாததை அவர் சொன்னார். அதன்பிறகு எல்போ கார்டை ரீ டிசைன் செய்தேன். எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன.  தாஜ் கோரமண்டல் ஊழியர் என்னுடைய எல்போ கார்டை பற்றி கூறிய பிறகு அதன் வடிவத்தை மாற்றினேன். அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன். கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாகவும், தமிழில் டுவிட் செய்தும் சச்சின் நெட்டிசன்களுக்கு கோரிக்கை வைத்து உள்ளார்.

Published by
murugan

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

3 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

3 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

4 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

4 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

7 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

7 hours ago