இந்தியா,பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14-ம் தேதி தொடங்கி நேற்று முடிந்தது.இப்போட்டி இந்தூரில் நடைபெற்றது.முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பான பந்துவீச்சால் இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்திய அணி தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய &பாகிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்து உள்ளது.
இந்திய அணி இந்த வருடம் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக புனேவில் இன்னிங்ஸ் மற்றும்137 ரன்கள், ராஞ்சியில் இன்னிங்ஸ் & 202 ரன்கள் வித்தியாசத்தில் என இரண்டு முறை வெற்றி பெற்றது.இதை தொடர்ந்து நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக இன்னிங்ஸ் & 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி கடந்த 1930 மற்றும் 31-ம் ஆண்டு தொடர்ந்து மூன்று முறை இன்னிங்ஸ் மற்றும் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. அதன் பிறகு பாகிஸ்தான் அணி கடந்த 2001 மற்றும் 02- இதே சாதனையை படைத்தது.
இதை தொடர்ந்து தற்போது இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் & 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரு அணியின் சாதனையை சமன் செய்து உள்ளது.
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…