தொடர்ந்து பெய்து வரும் மழையால் போட்டி ரத்து .! ஒரு இன்னிங்க்ஸ் கூட விளையாடலா வீரர்கள் புலம்பல்.!

Published by
murugan
  • இலங்கை ,பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 11-ம் தேதி தொடங்கியது.
  • 3-ம் நாள் மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. பிறகு போட்டி 5.2 ஓவர்கள் மட்டுமே நடைபெற்றது.இன்று 4-வது நாள் ஆட்டம்  தொடர் மழையால்  நிறுத்தப்பட்டது.

இலங்கை ,பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்ததது.

இந்நிலையில் இலங்கை அணி 2-வது நாள் பேட்டிங் செய்துகொண்டு இருக்கும்போது மழை பெய்ததால் 2-ம்  நாள் முடிவில் இலங்கை 6 விக்கெட்டை இழந்து 263 ரன்கள்எடுத்தனர். இதை தொடர்ந்து  3-ம்  நாள் ஆட்டமும் வானிலை காரணமாக பாதிக்கப்பட்டது. 2-ம்  நாள் இரவில் பெய்த பலத்த கன மழை காரணமாக மைதானம்  ஈரப்பதமாக இருந்தது.

இதனால் 3-ம்  நாள் மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. இடைவேளைக்கு பிறகு போட்டி தொடங்கப்பட்டது. ஆனால் ஆட்டம் தொடங்கிய  5.2 ஓவர்கள் மட்டுமே விளையாடினர்.பின்னர் மேகம் கருப்பாக காணப்பட்டதால் விளையாட போதிய வெளிச்சம் இல்லாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில்  3-வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட்டை இழந்து  282 ரன்கள்எடுத்து இருந்தனர். களத்தில் தனஞ்ஜெயா டி சில்வா 87 , தில்ருவான் பெரேரா 6 ரன்களுடனும் விக்கெட்டை  இழக்காமல் இருந்தனர்.இன்று 4-வது நாள் ஆட்டம்  தொடங்க இருந்தது. ஆனால் அங்கு பெய்துவரும் தொடர் மழையால் இன்றைய போட்டியும் நிறுத்தப்பட்டது.

Published by
murugan

Recent Posts

என்னை மிரட்டுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்க! டிஜிபிக்கு கடிதம் எழுதிய வீடியோ எடுத்த நபர்!

என்னை மிரட்டுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்க! டிஜிபிக்கு கடிதம் எழுதிய வீடியோ எடுத்த நபர்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

1 minute ago

கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும் – தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

சிவகங்கை  : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

18 minutes ago

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் தொடக்கம்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…

34 minutes ago

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

10 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

11 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

11 hours ago