ஒத்திவைக்கப்படுகிறது ஒலிம்பிக்… ஜப்பான் பிரதமர் பாராளுமன்றத்தில் தகவல்…

Published by
Kaliraj

திட்டமிட்டபடி  ஒலிம்பிக் போட்டிகள்  துவங்கினால், எங்கள் நாட்டு  வீரர், வீராங்கனைகளை அனுப்ப மாட்டோம்,’ என கனடா, ஆஸ்திரேலியா  ஆகிய நாடுகள்  தெரிவித்தன. இதனால் டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது. ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி-ஆகஸ்ட் மாதம்  9ல் ஒலிம்பிக் விளையாட்டு நடக்கவுள்ளது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதால் அமெரிக்கா, இங்கிலாந்து நட்சத்திரங்கள் உட்பட அந்த நாடுகளின் ஒலிம்பிக் கமிட்டியும் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. இருப்பினும் திட்டமிட்டபடி ஒலிம்பிக் நடக்கும் என கூறப்பட்டது. இதனிடையே டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க மாட்டோம் என கனடா, ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பார்லிமென்டில் பேசுகையில், ‘ஒலிம்பிக் விளையாட்டை முழுமையாக நடத்த விரும்புகிறோம். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஒருவேளை சிக்கல் ஏற்பட்டால் நமக்கு வேறு வழியில்லை. வீரர், வீராங்கனைகளின் உடல்நலன் தான் முக்கியம் என்ற ஒலிம்பிக் தத்துவத்தின் படி, தள்ளி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். மற்றபடி ஒட்டுமொத்தமாக ரத்து செய்யும் திட்டம் இல்லை,’ என்றார்.
ஜப்பான் பிரதமரின் அறிவிப்பை அடுத்து திட்டமிட்டபடி ஒலிம்பிக் துவங்குவது சந்தேகம் தான். இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும்.

Recent Posts

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

3 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

4 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

4 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

5 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

5 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

6 hours ago