ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டியான பிபிஎல் டி 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் மேலபோர்னே ஸ்டார்ஸ் vs ஹோபார்ட் ஹரிஸான்ஸ் இரு அணிகளும் மோதின.
இப்போட்டியில் காயமடைந்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னிற்கு பதிலாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்ஹாரிஸ் ரவூப் மேலபோர்னே ஸ்டார்ஸ் அணியில் இடம் பிடித்தார்.
இவர் பாகிஸ்தான் அணியில் விளையாட வில்லை என்றாலும் பாகிஸ்தான் உள்ளூர் போட்டிகளில் விளையாடி இதன் மூலம் மிகவும் பிரபலமானார். நேற்று முன்தினம் போட்டியில் முதலில் இறங்கிய மேலபோர்னே ஸ்டார்ஸ் 20 ஓவரில் 163 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் ஹோபார்ட் ஹரிஸான்ஸ் அணி இறங்கியது.இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஹாரிஸ் ரவூப் 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் 111 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டியில் ஹாரிஸ் ரவூப்க்கு 5 விக்கெட்டை வீழ்த்த உதவிய பந்தை மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு இந்தியருக்கு அந்த பந்தை ஹாரிஸ் ரவூப் பரிசாக கொடுத்தார்.
பிறகு பேசிய நான் போட்டிக்கு வந்தபோது பாகிஸ்தானை சேர்ந்தவன் என கூறியதை அடுத்து அந்த இந்திய பாதுகாவலர் தன்னை கட்டியணைத்து கண்ணீர் விட்டதாக ஹாரிஸ் ரவூப் கூறினார். அதன் காரணமாகவே தான் பந்தை அவருக்கு பரிசாக கொடுத்ததாக அவர் கூறினார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…