ஏலத்தில் தவறான வீரரை வாங்கிய ப்ரீத்தி ஜிந்தா.. பல லட்சம் இழந்த பஞ்சாப்..!

Published by
murugan

ஐபிஎல் புதிய சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19 நேற்று துபாயில் நடைபெற்றது. வழக்கம் போல ஏலம் இந்தியாவில் நடைபெறாமல் வெளிநாட்டில் ஏலம் நடத்தப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் (ரூ. 24.75 கோடி), பேட் கம்மின்ஸ் (ரூ. 20.50 கோடி) அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள். ஏலத்தின் போது பஞ்சாப் கிங்ஸ் பெரிய தவறு செய்தது. தங்கள் அணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, பஞ்சாப் கிங்ஸ் தவறான வீரரை ஏலத்தில் எடுத்தது.

​​பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் ப்ரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா, பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், ட்ரெவர் பெய்லிஸ் ஆகியோர் இருந்தனர். ஏலத்தின் போது, ​​ஏலதாரர் மல்லிகா சாகர், சத்தீஸ்கர் அணிக்காக விளையாடும் 32 வயதான ஷஷாங்க் சிங்கின் பெயரை உச்சரித்தார். அப்போது அவரை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து ஷஷாங்க் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்ததாக ஏலதாரர் மல்லிகா சாகர் அறிவித்தார். ஆனால், அப்போது தான் தாங்கள் தவறான ஷஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுத்ததை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தெரியவந்தது.

உண்மையில் பஞ்சாப் அணி 19 வயதான ஷஷாங்க் சிங்கை வாங்க முடிவு செய்து இருந்தனர். இதுபற்றி பஞ்சாப் கிங்ஸ் ஏலதாரர் மல்லிகா சாகரிடம் தெரிவித்தார். அவர் ஒருமுறை ஏலத்தில் எடுத்துவிட்டால் அதனை மாற்றமுடியாது என்ற விதிமுறையை கூறி மல்லிகா சாகர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தார்.

தற்போது, ​​சத்தீஸ்கர் அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஷஷாங்க் சிங்,  பஞ்சாப்  அணியின் இந்த தவறால் பலன் அடைந்துள்ளார். இந்த சீசனில் அவர் பஞ்சாப் அணியில் விளையாடுவார்.

ஷஷாங்க் சிங் யார்?

ஷஷாங்க் இதற்கு முன்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் 2022ல் 10 போட்டிகளில் 69 ரன்கள் எடுத்தார்.  அவர் 15 முதல் தர, 30 லிஸ்ட் ஏ மற்றும் 55 டி-20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர், அதில் அவர் மூன்று சதங்களையும் அடித்துள்ளார்.

 

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

10 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

11 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

11 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

12 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

13 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

13 hours ago