இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நேற்று பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 106 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 , உமேஷ் 3 , மற்றும் ஷமி 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் 21 , மயங்க் அகர்வால் 14 ரன்களுடன் வெளியேறினர். பின்னர் நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்தனர்.
களத்தில் கோலி 59 , ரஹானே 23 ரன்களுடன் இருந்தனர்.இன்று இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது.நிதானமாக விளையாடி வந்த ரஹானே அரைசதம் அடித்தார். அரைசதம் அடுத்த சில நிமிடங்களில் ரஹானே 51 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.பிறகு ஜடேஜா களமிறங்க சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் கோலி சதம் விளாசினார்.
ஜடேஜா 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தி வந்த கோலி 136 ரன்கள் இருக்கும்போது விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இறுதியாக இந்திய அணி 9 விக்கெட்டை இழந்து 347 ரன்கள் எடுத்து இருந்தபோது இந்திய அணியின் கேப்டன் கோலி டிக்ளர் செய்தார்.பங்களாதேஷ் அணியில் எபாதத் ,அல்-அமீன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டை பறித்தனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…