இந்தியா , தென்னாபிரிக்கா இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழந்து 601 ரன்கள் எடுத்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இதில் அதிகபட்சமாக விராட்கோலி 254 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். மயங்க் அகர்வால் 108 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்கள் எடுத்த போது 8 விக்கெட்டை இழந்து தடுமாறி விளையாடி வந்தது.
அப்போது ஒன்பதாவது விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடிய மகாராஜா 72 ரன்கள் குவித்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டும் , உமேஷ் யாதவ் 3 விக்கெட் எடுத்தனர். இதனால் இந்திய அணி 326 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இது தொடர்ந்து தென்னாபிரிக்கா அணிக்கு பாலோ-ஆன் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி ஆட்டம் தொடக்கத்திலே ரன் எடுக்காமல் ஐடன் மார்க்ராம் வெளியேறினார். பின்னர் இறங்கிய டி ப்ரூயின் 8 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் டீன் எல்கர் நிதானமாக விளையாடி அரைசதம் அடிக்காமல் 48 ரன்களுடன் வெளியேறினார். இதையடுத்து கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் , குவின்டன் டி காக் இருவரும் 5 ரன்களில் வெளியேறினார். தற்போது தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டை இழந்து 110 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…