ஒரு பெரிய போர்;அரையிறுதியில் நடால் – ஜோகோவிச் மோதல்…!

Published by
Edison
  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரை இறுதி போட்டிக்கு,ஸ்பெயின் ஜாம்பவான் ரபேல் நடால் மற்றும் செர்பிய சாம்பியன் ஜோகோவிச் முன்னேறியுள்ளனர்.
  • இதனால்,அரை இறுதியில் கடும் மோதல் நிலவும் என எதிர்பார்க்கபடுகிறது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது.இதில்,பிரஞ்சு ஓபன் டென்னிஸின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் அரை இறுதிக்கு முன்னேறினார்.

அதாவது,பாரீசில் நடந்த கால் இறுதி போட்டியில் செர்பிய சாம்பியன் ஜோகோவிச்,இத்தாலி இளம் வீரர் மேட்டோ பிரட்னீயை எதிர்கொண்டார். எனினும்,ஜோகோவிச் தனது சிறப்பான ஆட்டம் மூலமாக இறுதியில் 6-க்கு 3, 6-2, 6-7, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

அந்த வகையில்,13 முறை வெற்றியாளரான ஸ்பெயின் ஜாம்பவான் ரபேல் நடால்,அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை 6-3, 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 14 வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதனால்,பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் ரபேல் நடால்,செர்பிய சாம்பியன் ஜோகோவிச் இடையே கடும் மோதல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து,நோவக் ஜோகோவிச் கூறுகையில்,”58 வது முறையாக ரஃபேல் நடாலை எதிர்கொள்வதும்,பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் ஒரு இடத்தைப் பெறுவதும் என்பது ஒரு மிகப் பெரிய போட்டியாளருக்கு எதிரான ஒரு பெரிய போராக இருக்கும்”, என்று கூறினார்.

Published by
Edison

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

2 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

3 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

3 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

4 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

6 hours ago