இந்தியா , தென் ஆப்பிரிக்கா இடையே மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழந்து 497 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரோகித்சர்மா 212 ரன்களும் , ரஹானே 115 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்க அணி 162 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது இதனால் இந்திய அணி 335 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதை தொடர்ந்துதென் ஆப்பிரிக்க அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்டது.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆட்டம் தொடக்கத்திலிருந்து விக்கெட்டை இழந்தது .தென்ஆப்பிரிக்கா அணி 40 ரன்களுக்கு ஐந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து நேற்று விளையாடி வந்தது.
நேற்று ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென்னாபிரிக்க அணி 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட் வாஷ் செய்தது. இந்திய அணி சார்பில் ஷமி 3 விக்கெட்டும் ,உமேஷ் ,நதீம் தலா 2 விக்கெட்டை பறித்தனர். தென் ஆப்பிரிக்கா அணியுடன் இந்தியா விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது.
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…
சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…