இந்தியா , தென் ஆப்பிரிக்கா இடையே மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழந்து 497 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரோகித்சர்மா 212 ரன்களும் , ரஹானே 115 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்க அணி 162 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது இதனால் இந்திய அணி 335 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதை தொடர்ந்துதென் ஆப்பிரிக்க அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்டது.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆட்டம் தொடக்கத்திலிருந்து விக்கெட்டை இழந்தது .தென்ஆப்பிரிக்கா அணி 40 ரன்களுக்கு ஐந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து நேற்று விளையாடி வந்தது.
நேற்று ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென்னாபிரிக்க அணி 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட் வாஷ் செய்தது. இந்திய அணி சார்பில் ஷமி 3 விக்கெட்டும் ,உமேஷ் ,நதீம் தலா 2 விக்கெட்டை பறித்தனர். தென் ஆப்பிரிக்கா அணியுடன் இந்தியா விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…