இரண்டு நாட்களுக்கு முன்பு துபாயில் நடந்த ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி 1.5 கோடிக்கு டாம் கரணை வாங்கியது. ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் லீக் தொடரான பிக்பாஷ் லீக்கில் விளையாடி வரும் டாம் கரன் ஆடுகளத்தில் ஓடி வார்ம் அப் செய்ததற்காக நடுவருடன் சண்டை போட்டதால் நான்கு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
28 வயதான இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டாம் கரன் தற்போது பிக் பாஷ் லீக்கில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த டிசம்பர் 11 அன்று ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன் டாம் கரன் ஆடுகளத்தில் ஓடி வார்ம் அப் செய்தார். அப்போது நடுவர் ஆடுகளத்தில் ஓட வேண்டாம் என அறிவுறுத்தியும் அவரின் பேச்சை கேட்காததால் கரண் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடையால் டாம் கரன் பிக் பாஷ் லீக்கில் அடுத்த நான்கு போட்டிகளில் விளையாடமாட்டார். அதன்படி நாளை (டிசம்பர் 22) அடிலெய்டுக்கு எதிரான ஆட்டத்திலும், டிசம்பர் 26 மெல்போர்ன் ஸ்டார்ஸ், டிசம்பர் 30 சிட்னி தண்டர், மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி பிரிஸ்பேன் ஹீட் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் டாம் கரன் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒரு போட்டி தொடங்குவதற்கு முன் கேப்டனும், அணி பயிற்சியாளரும் மட்டுமே ஆடுகளத்தின் நிலையை தெரிந்து கொள்வதற்கு விளையாடும் பிட்ச்சிற்க்கு நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…