இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் தோனியை வரவேற்கும் விதமாக, அவரின் ரசிகர்கள் பல விதமாக ட்வீட் செய்து வருகின்றனர்.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்களை கொண்டுள்ளதால், இந்தாண்டு கண்டிப்பாக ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் செப்டெம்பர் மாத இறுதியில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் மாத இறுதியில் இந்தியாவில் செப்டெம்பர் மாத இறுதியில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்த போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்காவிட்டால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஐபிஎல் தலைவர் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டிகள், செப்டம்பர் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை நடத்த ஆலோசனை செய்துள்ளோம் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். மேலும் நவம்பர் 8-ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள், மகிழ்ச்சி அடைந்தனர். அதிலும் குறிப்பாக, தல தோனி ரசிகர்கள். தோனி தலைமையில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றது. மேலும், ஜார்கண்ட் மாநிலம், ரஞ்சியின் பிறந்தாலும், தமிழ்நாடால் கொண்டாடப்படும் “தல” ஆவார்.
அதற்க்கு காரணம், தமிழக மக்கள் அவருக்கு அளித்த ஆதரவே ஆகும். அதன்காரணமாக, தோனியை மக்கள் செல்லமாக “தல” என்று அழைத்து வருகின்றனர். தல தோனி, கடைசியாக 2019-ம் ஆண்டு நடந்த இந்தியா-நியூஸிலாந்து இடையே நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தான் அவரை பார்க்க முடித்தது.+-*
அதன்பன், கடந்த மார்ச் மாதத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக விளையாடும் அவர், சென்னை சேபாக் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டார். அப்பொழுது அங்கு கூடிய ரசிகர்கள், தோனி மைதானத்திற்குள் வரும்போதே அவரை கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
இந்தநிலையில் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் தோனியின் ஆட்டத்தை காணவுள்ளோம் என அவரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக கொண்டிருக்கின்றனர். மேலும், அவரை வரவேற்கும் விதமாக, “வெய்ட்டிங் பார் தல என்ட்ரி, செப்டம்பர் 19 கிங் அரைவ்ஸ்” போன்று ட்வீட் செய்து, அவரின் ஆட்டத்தை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…