மகாராஷ்டிரா : புனேவில் ஏடிஎஸ் கொசு மூலம் பரவும் ஜிகா வைரசால், மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 2 கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து புனேவில் அந்த வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் ஆய்வு நடத்தி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஜிகா வைரஸ் தொற்று இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது […]
மகாராஷ்டிரா : புனேயில் ஸ்வப்னில் தாவ்டே என்ற இளைஞர், தனது ஜிம்மில் இருந்து 32 பேர் கொண்ட குழுவுடன், கடந்த சனிக்கிழமையன்று மும்பைக்கு மிக அருகில் உள்ள தம்ஹினி காட்டில் உள்ள நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்தார். அங்கு நீர்வீழ்ச்சியில் குதித்த ஸ்வப்னில் தாவ்டே, பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார் உடனடியாக தேடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் காணவில்லை. இதற்கு முன்னதாக, ஐந்து குடும்ப உறுப்பினர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. அந்த நபரின் 10 வயது […]
மகாராஷ்டிரா : மும்பை-நாக்பூர் விரைவுச் சாலையில் கட்வாஞ்சி கிராமத்திற்கு அருகே இரண்டு கார்கள் மோதியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஸ்விப்ட் டிசையர் கார் ஒன்று பல பொருட்களை ஏற்றிக்கொண்டு நெடுஞ்சாலையில் தவறான வழியில் சென்று நாக்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த எர்டிகா காரின் மீது மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் எர்டிகா கார் காற்றில் வீசப்பட்டது, நெடுஞ்சாலையின் தடுப்பில் தரையிறங்கியது, […]
மகாராஷ்டிரா : டோம்பிவிலியில் பெண் ஒருவர் கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த பெண் வேதனை அடைந்து இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. தானே நகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட டோம்பிவிலி மன்படா காவல் நிலையப் பகுதியை சேர்ந்த ப்ரீத்தி உமாபாரதி என்ற பெண்ணுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து போன அந்த […]
மகாராஷ்டிரா : காரை ரிவர்ஸ் செய்யும் போது 300 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பாஜி நகரில் உள்ள ஹனுமன்நகரைச் சேர்ந்த 23 வயதான ஸ்வேதா தீபக் தனது காரை எடுத்துக்கொண்டு சுலிபஞ்சன் மலையில் உள்ள தத்தாத்ரேயர் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது ரீல்ஸ் மீது உள்ள ஆர்வத்தில் தன்னுடன் வந்த தனது நன்பர் 25 வயது நண்பர் சூரஜ் சஞ்சாவிடம் தான் கார் ஓட்டுவதை வீடியோ எடுக்க […]
மக்களவை தேர்தல் : 543 லோக்சபா இடங்களுக்கான முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் அறிவித்துள்ளது. இதில், பாஜக 240 இடங்களையும், காங்கிரஸ் 99 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனிடையே, மும்பை வடமேற்குத் தொகுதியில் போட்டியிட்ட ஏக்நாத் சிண்டேவின் சிவசேனா பிரிவு வேட்பாளர் ரவீந்திர வைகருக்கு 4,52,644 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு அடுத்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அணி வேட்பாளர் அமோல் கஜனன் கிர்திகாருக்கு 4,52,596 வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம், வைகர் 48 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். […]
மும்பை : மீரா சாலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 42 வயதுடைய நபர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்த பரபரப்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உயிரிழந்த அந்த நபர் பணிபுரியும் நிறுவனத்தின் தலைமையில் ஊழியர்களிடையே போட்டி நடைபெற்றது. அப்போது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த நிலையில், சிக்ஸர் அடித்து விட்டு அடுத்த பந்துக்கு தயாராக இருந்த அந்த நபருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அப்படியே மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். मुंबई के […]
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா அந்தாரேவை அழைத்துச் செல்வதற்காக சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ராய்காட் மக்களவைத் தொகுதிக்கு மே 7-ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது இந்நிலையில், அவர் ஹெலிகாப்டர் மூலம் பிரசாரத்திற்கு செல்ல இருந்தார். இதற்காக, தற்காலிக ஹெலிபேடில் ஹெலிகாப்டரை தரையிறக்க முயற்சித்தபோது, கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி […]
Election2024: இன்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் என வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணி […]
Election2024: இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 11 மணி வரை திரிபுராவில் அதிகபட்சமாக 36.42% வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல். மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி நடைபெறுகிறது. வாக்களிக்க தகுதியுடையவர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதில் சில மாநிலங்களில் வாக்குப்பதிவு மந்தமாகவும், சில இடங்களில் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருவதாகவும் […]
Maharashtra : மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிக்குள் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணை இம்மாதம் வெளியாக உள்ள நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. ஒருபக்கம் மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், மறுபக்கம் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகளின் இடையே தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது. Read More – பாஜகவில் இணைவது குறித்த […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதான தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மும்மரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் அக்கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்திருந்தார். ஏற்கனவே, அம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மிலிந்த் தியோரா, பாபா சித்திக் ஆகியோர் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து அசோக் சவானும் விலகி இருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து […]
மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஒரு மாத காலத்தில் அம்மாநிலத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மிலிந்த் தியோரா, பாபா சித்திக் ஆகியோர் கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது அசோக் சவான் விலகி இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தேசியாக கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. […]
மும்பை அல்காஸ் நகர் காவல் நிலையத்தில் துப்பாக்கிசூடு நடத்திய பாஜக எம்எல்ஏ உட்பட மூன்று கைது செய்யப்பட்ட நிலையில், துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு மகாராஷ்டிரா துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான தேவேந்திர ஃபடனாவிஸ் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உல்லாஸ்நகர் காவல் நிலையத்திற்கு பாஜக எம்எல்ஏ கனபத் கெயிக்வாட் மற்றும் சிவசேனா ஷிண்டே பிரிவு முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட் இருவரும் வெவ்வேறு பிரச்சினைகளுக்காக புகார் அளிப்பதற்காக வந்துள்ளனர். அப்போது, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதல் […]
30,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) காலை மகாராஷ்டிரா மாநிலம் வருகை தந்தார். அதன் ஒருபகுதியாக, மகாராஷ்டிராவின் நாசிக்கில் ‘ஸ்வச்சதா அபியான்’ (தூய்மை இயக்கம்) நிகழ்ச்சியில் பங்கேற்றார். நாசிக்கின் பஞ்சவடி பகுதியில் அமைந்துள்ள காலாராம் கோயிலின் தரையை மாப் போட்டு சுத்தம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, இன்று பிற்பகல் 3:30 மணி அளவில், அடல் சேது என […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. இதில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார். இரண்டரை ஆண்டுகள் கடந்த இந்த ஆட்சியில், அடுத்ததாக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு வழங்கிய தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனை அடுத்து உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டது. இந்த அரசியல் […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில், பாஜகவும், இந்தியா கூட்டணி கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக, பாஜகவை வீழ்த்த ஒற்றைக் குறிக்கோளோடு, வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி, பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு, வியூகங்களை வகுத்து வருகிறது. இருப்பினும், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், தற்போது வரை பிரதமர் வேட்பாளரையோ, தொகுதிப் பங்கீட்டையோ இறுதி செய்யாமல் இந்தியா’ கூட்டணி கட்சிகள் […]
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள கையுறைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தில் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த சிலர் தீவிபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மின்கசிவு விபத்துக்கான காரணமாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். தகவலின்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து […]
இஸ்லாமிய மத சட்ட விதிமுறைப்படி மாமிச உணவுகளாக கொல்லப்படும் கால்நடைகளுக்கு , உணவு பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படும். இதனை ஒருசில இஸ்லாமிய அமைப்புகள் வழங்குகின்றன. இதற்கு கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன. இந்த ஹலால் சான்றிதழ் உத்திர பிரதேசசத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் ஹலால் சான்றிதழ் தடை செய்யப்பட்டது போல மகாராஷ்டிராவிலும் ஹலால் சான்றிதழ் தடை செய்யப்பட வேண்டும் என மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ நித்தேஷ் ரானே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஹலால் சான்றிதழுக்காக சேகரிக்கப்பட்ட […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு அம்மாநிலத்தில் மராத்தா மக்கள் நீண்ட வருடமாக போராடி வருகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் 10 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து 16 சதவீத இடஒதுக்கீடு மராத்தா மக்களுக்கு அளிக்கப்பட்டது. ஆனாலும், இந்த 16 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் பிறகு அந்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்து இருந்தது. இது மராத்தா சமூக மக்களிடையே அதிருப்தியை […]