மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த பிரச்சார ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.!

Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

Helicopter crash

Helicopter crash :மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா அந்தாரேவை அழைத்துச் செல்வதற்காக சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ராய்காட் மக்களவைத் தொகுதிக்கு மே 7-ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது

இந்நிலையில், அவர் ஹெலிகாப்டர் மூலம் பிரசாரத்திற்கு செல்ல இருந்தார். இதற்காக, தற்காலிக ஹெலிபேடில் ஹெலிகாப்டரை தரையிறக்க முயற்சித்தபோது, கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி படுகாயமடைந்த நிலையில், ஹெலிகாப்டர் கடும் சேதமடைந்துள்ளது.

காலை 9.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது, ஹெலிகாப்டர் நிலைதடுமாறி சாய்ந்ததில் விமானிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவில், ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது அதன் கட்டுப்பாட்டை இழந்து, வளைந்து, தள்ளாடி கீழே விழுவது தெரிகிறது.

unknown node