சிவகங்கை: சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. குவாரியில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுமார் 450 அடி ஆழமுள்ள இந்த குவாரியில் திடீரென பெரிய அளவில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. பாறைகளை அகற்றுவதற்காக பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த சரிவு […]