தமிழ்நாட்டில் 250 பள்ளிகளில் கோடிங் மற்றும் ரோபோடிக்ஸ் கற்றுக்கொடுக்கும் முயற்சியில் அமேசான் நிறுவனம் இறங்கியுள்ளது. இந்தியாவின் மிக பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் தனது ‘ஃபியூச்சர் என்ஜினீயர்’ திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 250 பள்ளிகளுக்கு கோடிங் மற்றும் ரோபோடிக்ஸ் பற்றிய பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.இந்த திட்டத்தில் சென்னையில் உள்ள ஆஷா தொண்டுநிறுவனமும் இணைந்துள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக சென்னையின் புறநகர் பகுதியான ராமஞ்சேரியில் உள்ள ஆசிரியரான சீதா எழிலரசி நடத்தி […]
500 மில்லியன் வாட்ஸ்அப் தரவுகள் இணையத்தில் விற்பனைக்கு வந்துள்ளதாக, அமெரிக்காவின் சைபர்நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய தரவு மீறல்களில் ஒன்றாக, கிட்டத்தட்ட 500 மில்லியன் வாட்ஸ்அப் பயனர்களின் தொலைபேசி எண்கள் கசிந்து விற்பனைக்கு வந்துள்ளன. அமெரிக்காவின் ஊடகமான சைபர்நியூஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, பிரபலமான ஹேக்கிங் தளத்தில், 84 நாடுகளைச் சேர்ந்த வாட்ஸ்அப் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை வாட்ஸ்அப் மறுத்துள்ளது. சைபர்நியூஸில் வெளியிடப்பட்ட கூற்று, ஆதாரமற்றது. வாட்ஸ்அப்பில் இருந்து ‘தகவல் கசிவு’ […]
வாட்ஸ்அப் செயலியானது, மெசேஜ் யுவர்செல்ஃப் எனும் தனக்கு தானே செய்தி அனுப்பும் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்துகிறது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியானது அனைவரும் எதிர் பார்த்த புதிய அம்சமான மெசேஜ் யுவர்செல்ஃப்(message yourself) என்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்த அம்சமானது ‘மெசேஜ் யுவர்செல்ஃப் ‘ எனும் தனக்கு தானே செய்தி அனுப்பும் அம்சமாகும். இதுவரை சோதனையில் இருந்துவந்த இந்த மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சமானது, வருகிற வாரங்களில் பயனர்களின் உபயோகத்திற்கு வரவுள்ளதாக வாட்சப், அறிவித்துள்ளது. இந்த […]
சீனாவின் ஹூவாய் மற்றும் இசட்.டி.இ(ZTE) நிறுவனங்களிலிருந்து தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்குவதற்கு அமெரிக்கா தடை. நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துவதாகக் கூறி, சீனாவின் ஹூவாய் மற்றும் இசட்.டி.இ(ZTE) நிறுவனங்களிலிருந்து தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதற்கும், அமெரிக்காவில் விற்பதற்கும் அமெரிக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இரண்டு நிறுவனங்களும், அமெரிக்க ஃபெடரல் (கம்யூனிகேஷன் கமிஷன்(FCC) தகவல் தொடர்பு ஆணையத்தால் அச்சுறுத்தல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அமெரிக்க FCC ஆனது, சீனாவின் டஹுவா டெக்னாலஜி, வீடியோ கண்காணிப்பு […]
ஆப்பிள் மற்றும் கூகுள், நிறுவனங்கள் ட்விட்டரை தடை செய்தால், நான் வேறு ஸ்மார்ட் போனை உருவாக்குவேன் என மஸ்க் கூறியுள்ளார். ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்களது ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நீக்கினால், சொந்தமாக புதிய ஓ.எஸ்(OS) மற்றும் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துவேன் என்று ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க், மறைமுகமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க கன்சர்வேட்டிவ் (பழமைவாத) அரசியல் விமர்சகர் லிஸ் வீலர், ட்விட்டரில் இது குறித்து கேட்ட கேள்விக்கு மஸ்க் பதிலளித்துள்ளார். If Apple […]
எலான் மஸ்க், ட்விட்டரின் சரிபார்க்கப்பட்ட ப்ளூ பேட்ஜ்களை அடுத்தவாரம் புதிய நிறங்களில் மீண்டும் அறிமுகப்படுத்துகிறார். ட்விட்டரின் ‘சரிபார்க்கப்பட்ட ப்ளூ’ சேவையை எலான் மஸ்க் அடுத்தவாரம் மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். ட்விட்டரில் போலிக்கணக்குகளை முடக்குவதற்காக ‘ட்விட்டர் ப்ளூ பேட்ஜ்’ தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தும் மஸ்க் கூறியதாவது, தாமதத்திற்கு மன்னிக்கவும். நாங்கள் இந்த மேம்படுத்தப்பட்ட சேவையில் சில மாற்றங்களுடன் அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்துகிறோம். இதன்படி நிறுவனங்களுக்கு தங்க(Gold) நிறமும், அரசாங்க கணக்குகளுக்கு […]
டெஸ்லாவின் பங்குகள் சரிந்ததால் உலகின் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பில் $100 பில்லியன் இழப்பு. நவம்பர் 2020க்குப் பிறகு டெஸ்லா பங்குகள் மிகக் குறைந்த நிலைக்குச் சென்றதால், உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 2022ல் முதல்முறையாக 100 பில்லியன் டாலருக்கும்(ஏறத்தாழ 8லட்சத்து 17,000 கோடி) அதிகமாகக் குறைந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு மஸ்க்கின் சொத்துமதிப்பு $340 பில்லியனுக்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி […]
எலான் மஸ்க்கைப் புகழ்ந்த டொனால்ட் டிரம்ப், ட்விட்டரில் மீண்டும் சேர விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு தற்போது இயங்கி வந்தாலும் டிரம்ப், ட்விட்டரில் மீண்டும் இணைவதில் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. ஐந்து பேர் உயிரிழந்த கலவரத்தைத் தூண்டியதாகவும், தளத்தின் சேவை விதிமுறைகளை மீறியதற்காகவும் டிரம்பின் கணக்கு கடந்த ஆண்டு தொடக்கத்தில் இடைநிறுத்தப்பட்டது. ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், கடந்த வாரம் ட்விட்டரில் ஒரு வாக்கெடுப்பை […]
எலான் மஸ்க், டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கை மீண்டும் தொடங்குவது குறித்து ட்விட்டர் கருத்துக்கணிப்பைக் கேட்டுள்ளார். எலான் மஸ்க், டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கை மீண்டும் தொடங்குவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் விதமாக, ட்விட்டரில் கருத்துக்கணிப்பைக் கேட்டுள்ளார், மக்களின் குரல் கடவுளின் குரல் என்பதால் உங்களிடம் கருத்து கேட்கிறேன் என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்க தலைநகர் மீதான தாக்குதலுக்குப் பிறகு, வன்முறையைத் தூண்டும் ஆபத்து காரணமாக ட்ரம்ப் 2021 இல் ட்விட்டரில் இருந்து நிரந்தரமாகத் […]
மெட்டா இந்தியாவின் துணைத் தலைவராக சந்தியா தேவநாதன், நியமிக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. மெட்டா இந்தியாவின் துணைத் தலைவராக சந்தியா தேவநாதன், நியமிக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா இன்று அறிவித்துள்ளது. மெட்டாவின் நீண்டகால வளர்ச்சிக்கும் இந்தியாவிற்கான அர்ப்பணிப்புக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் சந்தியா தேவநாதன், நிறுவனத்தின் வணிகம் மற்றும் வருவாய் வளர்ச்சிக்கு கவனம் செலுத்துவார். மெட்டாவின் தலைவராக இருந்த அஜித் மோகன்,கடந்த சில நாட்களுக்கு முன்பு மெட்டாவின் போட்டி நிறுவனமான ஸ்னாப் இன்க் நிறுவனத்தில் சேர […]
அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் USB-C போர்ட்டை படிப்படியாக வெளியிட மொபைல் துறை ஒப்புக்கொள்வதாக அரசு தெரிவித்தது. அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட்டை படிப்படியாக வெளியிடுவதற்கு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. MAIT, FICCI, CII போன்ற தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள், IIT கான்பூர், IIT (BHU)வாரணாசி […]
அமேசான் நிறுவனம் இந்த வாரம் பணிநீக்க வேலையை தொடங்கி விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அமேசான் நிறுவனம் 10,000 பணியாளர்களை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அமேசான் தற்போது அந்த வேலையை தொடங்கி விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இது குறித்து வன்பொருள் தலைவர் டேவ் லிம்ப் அதன் பணியாளர்களுக்கு அனுப்பிய மெமோவில், நாங்கள் ஆழமாக யோசித்து சில முடிவுகளை எடுத்துள்ளோம், அதன்படி சில குழுக்களை ஒருங்கிணைத்து சில பதவிகளை அதன்மூலம் […]
எலான் மஸ்க் ட்விட்டரின் நீல நிறைகுறியீடு சந்தா சேவை முறை, நவம்பர் 29முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார். ட்விட்டரின் நீலக்குறியீடு உறுதிப்படுத்தப்பட்ட பயனர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், ட்விட்டரின் தலைமைபொறுப்பேற்ற எலான் மஸ்க் நீலக்குறியீடுக்கு மாதம் $8 செலுத்தி பெறும் முறையைக் கொண்டுவந்தார். இதனையடுத்து போலிக்கணக்குகள் மூலம் பயனர்கள் இந்த நீலக்குறியீடு பெற்று வந்த குற்றச்சாட்டை அடுத்து மஸ்க் இந்த நீலக்குறியீடு சந்தாதாரர் முறையை தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தார். தற்போது மஸ்க் நவ-29 ஆம் தேதி ட்விட்டரின் […]
வாட்ஸ்அப் இந்தியா வின் தலைமை பொறுப்பாளர் பதவியிலிருந்து அபிஜித் போஸ் பதவி விலகல். உலகில் பல பயனர்கள் பயன்படுத்தும் செய்தித்தளமான வாட்ஸ்அப் இந்தியா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளர் பதவியிலிருந்து அபிஜித் போஸ் பதவி விலகியுள்ளார். அபிஜித் போஸ், மற்றொரு வாய்ப்புக்காக இந்த பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும் இதேபோல் பப்ளிக் பாலிசி மெட்டா இந்தியாவின் இயக்குநர், ராஜீவ் அகர்வாலும் பதவி விலகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகெங்கிலும் உள்ள 11,000 ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணி நீக்கியபிறகு […]
பயனர்களின் இருப்பிடத்தை கண்காணித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கூகுள் நிறுவனத்திற்கு $392 மில்லியன் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது இருப்பிடத்தின் அனுமதியை அணைத்து வைத்த போதிலும் கூகுள் தொடர்ந்து பயனர்களின் இருப்பிடத்தைக் கண்காணித்ததாக அமெரிக்காவின் பல மாகாணங்களில் தொடரப்பட்ட வழக்கில், கூகுள் நிறுவனமானது அந்தந்த மாகாணங்களுக்கு $392 மில்லியன்(இந்திய மதிப்பில் ஏறத்தாழ 3,200கோடி) செலுத்த உள்ளது. இந்த மாகாணங்களின் வழக்கறிஞர்கள், அசோசியேட்டட் பிரஸ்ஸின் 2018 அறிக்கையை அடுத்து எழுந்த விசாரணையில் இது உறுதியானது. இருப்பிட வரலாற்று அம்சம் நிறுத்திவைக்கப்பட்டபோதும் […]
ட்விட்டர் நிறுவனம் ஏற்கனவே 50% ஊழியர்களை பணி நீக்கிய நிலையில் தற்போது 4,400 ஒப்பந்த ஊழியர்களை நீக்கியுள்ளதாக தகவல். ட்விட்டரின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு எலான் மஸ்க், ட்விட்டரின் வளர்ச்சி மற்றும் வருவாய் முன்னிட்டு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்நிறுவனம் ட்விட்டரின் 50% பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியது, இதில் இந்தியாவிலிருந்து பணிபுரியும் 90% பணியாளர்களை நீக்கியது. தற்போது நிரந்தர பணியாளர்களுக்கு பதில் ஒப்பந்த ஊழியர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிபுரியும் […]
ட்விட்டரின் நீலக்குறியீடு அடுத்த வாரத்தின் இறுதிக்குள் திரும்பவும் வந்துவிடும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக ட்விட்டரின் நீலக்குறியீடு அரசியல்வாதிகள், பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற பொது நபர்களுக்கு வழங்கப்பட்டுவந்தது, ஆனால் எலான் மஸ்க் ட்விட்டரின் வருமானத்தை கணக்கிட்டு, மாதம் $8 செலுத்தி யார் வேண்டுமானாலும் இந்த நீலக்குறியீடைப்பெறலாம் என அறிவித்திருந்தார். ஆனால் ட்விட்டரில் நிறைய போலிக்கணக்குகள் மாதம் $8 செலுத்தி நீலக்குறியீடு பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டை அடுத்து ட்விட்டரின் தலைவர் எலான் மஸ்க் கடந்த […]
ட்விட்டரின், மாதம் $8 செலுத்தும் ப்ளூ டிக் சந்தாதாரர் முறையை தற்காலிகமாக ட்விட்டர் நிறுவனம் நிறுத்தியுள்ளதாக தகவல். ட்விட்டரின் தலைமைபொறுப்பேற்ற பின் எலான் மஸ்க், ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார். அதில் ஒன்று தான் ட்விட்டரில், உறுதிப்படுத்தப்பட்ட பயனர்களுக்கு தரப்படும் ப்ளூ டிக் குறியீடு, இந்த ப்ளூ டிக் குறியீடு பெற பயனர்கள் மாதம் $8 செலுத்தவேண்டும் என அறிவித்தார். இதன்மூலம் பயனர்கள் பணம் செலுத்தி இந்த ப்ளூ டிக் குறியீட்டை பெற்றுக்கொள்ளலாம் ஆனால் பல […]
தினமும் 30 நிமிடங்கள் அரசு சார்ந்த பொதுநலன் குறித்த நிகழ்ச்சிகளை தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தனியார் சேனல்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தினமும் 30 நிமிடங்கள் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது தினமும் 30 நிமிடங்கள் மக்களுக்கு பயன்பெறும் வகையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, பொது நலன் தொடர்பான நிகழ்ச்சிகளை தனியார் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும் என மத்திய தகவல் மற்றும் […]
ட்விட்டர் ஊழியர்களை, அலுவலகத்திலிருந்து பணிபுரியுமாறு கூறி அதன் தலைவர் எலான் மஸ்க், அவர்களுக்கு முதல் இ-மெயில் அனுப்பியுள்ளார். ட்விட்டரின் தலைமை பொறுப்பேற்று 2 வாரங்கள் ஆன நிலையில், அதற்குள் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டார். ட்விட்டரின் பணியாளர்களை நீக்கியது, ப்ளூ டிக் சப்ஸ்கிரிப்சன் அம்சத்திற்கு மாதம் $8 விலை என பல அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தற்போது ட்விட்டரின் பணியாளர்களுக்கு, அதன் தலைவர் எலான் மஸ்க் முதன்முறையாக இ-மெயில் அனுப்பியுள்ளார். மஸ்க் இ-மெயிலில் கூறியதாவது, […]