அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதற்காக, மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்புக்கு சாதகமாக பயன்படுத்த, கோடிக்கணக்கான ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள், லண்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்தால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல, அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடும் வண்ணம் ரஷ்யாவை சேர்ந்தவர்களும் போலி கணக்குகளை உருவாக்கி ஃபேஸ்புக் மூலம் அமெரிக்க வாக்காளர்களின் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. […]
மக்கள் இன்டெர்நெட்டில் போக்கும் அநேக நேரங்கள் கூகிள்,பேஸ்புக் நிறுவனங்களின் தளங்களில்தான். இவ்வாறு மக்களை முழ்கி கிடக்க செய்யும் அளவிற்கு பல வசதிகளை கொடுக்கிறது கூகுள் நிறுவனம், இதற்கு முக்கிய காரணம் அவர்கள் மக்களுக்கு தேவையானதை சரியாக புரிந்து அதை எளிமையாக அவர்கள் கையில் வழங்குகின்றனர். உலகில் நீங்கள் எந்த மூலைக்கு சென்றாலும் உங்கள் கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் கூகுள் மேப் உதவியுடன் நீங்கள் பத்திரமாக வீடு திரும்பிவிடலாம். ஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தும் பலர் தங்கள் […]
முதன் முறையாக சூரியனை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விண்கலம் அனுப்புகிறது. சூரியனை ஆய்வு செய்வதற்காக பார்கர் சோலார் புரோப் என்ற விண்கலத்தை, நாசா உருவாக்கியுள்ளது. இந்த விண்கலம் புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்தில் இருந்து வரும் ஜூலை 31-ஆம் தேதி ஏவப்படவுள்ளதாக நாசா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 400 டிகிரி செல்ஷியஸ் வரையில் வெப்பத்தை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விண்கலம், சூரியனின் மேற்பரப்பில் இருந்து, 59 லட்சத்து 50 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் […]
ஒப்போ நிறுவனம் இன்று அட்டகாசமான அதன் புதிய அம்சமான ஒப்போ எப்7 என்ற ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வழியாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது,இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது செல்ஃபி பிரியர்களிடம். மேலும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இந்த ஒப்போ எப்7 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று ஒப்போ நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் கொண்ட ஒப்போ எப்7 சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.21,990-ஆக உள்ளது, அதே போல் 6ஜிபி ரேம் கொண்ட இந்த சாதனத்தின் விலை […]
புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் தனது புதியவிதமான தரமான தயாரிப்புகள் மூலம் தனது வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. உலகில் பலர் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். டெக்னாலஜி துறையில் முன்னனியில் உள்ள இந்த நிறுவனம் தற்போது ஆட்டோ மொபைல் துறைக்கு வருகிறது. இதற்கான பணியை கடந்த 2014ம் ஆண்டே துவங்கிவிட்டது. ஆப்பிள் நிறுவனம் தானாக இயங்கும் கார்களை தயாரித்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு சுமார் 1000 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கி அவர்களை […]
இந்தியாவில் அதிகமான பயனாளிகளை கொண்டுள்ள மிகப்பிரபலமான மெசேஜ் தளமான வாட்ஸ்ஆப், “பாதுகாப்பானது இல்லை” என்று வாட்ஸ்ஆப் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் வாட்ஸ்ஆப்பின் யூசர் அக்ரிமெண்ட் (பயனர் உடன்படிக்கை) நிபந்தனைகளின் மீது சில கேள்விகளும், பல சந்தேகங்களும் எழுந்தன. இவ்வண்ணம், பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்ஆப் அதன் பயனர் பாதுகாப்பு சார்ந்த சர்ச்சைக்குள் சிக்கியது. தற்போது தன் மீது கூறப்பட குற்றச்சாட்டுகளுக்கும், தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கும் வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கமும், பதிலும் அளித்துள்ளது. பயனர்களின் மெசேஜ்களை கண்காணிக்கிறது என்ற […]
பார்தி ஏர்டெல்,மற்ற நிறுவனங்களுடன் போட்டிபோடும் முனைப்பில் அதன் 300 எம்பிபிஎஸ் வேகத்திலான புதிய ஹோம் பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுதான் தற்போது வரையிலாக ஏர்டெல் வழங்கி வரும் மிக வேகமான பிராட்பேண்ட் திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாத காலம் செல்லுபடியாகும் இந்த 300 எம்பிபிஎஸ் வேகத்திலான திட்டமானது, ரூ.2199/- என்கிற மதிப்பை கொண்டுள்ளது. நன்மைகளை பொறுத்தவரை, வரம்பற்ற எஸ்டிடி / லோக்கல் அழைப்புகள் உட்பட 1200ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் […]
நாசா, லாக்கீட் மார்ட்டின் நிறுவனங்கள் இணைந்து மணிக்கு ஆயிரத்து ஐந்நூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் விமானத்தைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளன. வணிக நோக்கில் பயணிகள் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தும் சூப்பர்சோனிக் விமானத்தைத் தயாரிக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவும், போர் விமானத் தயாரிப்பு நிறுவனமான லாக்கீட் மார்ட்டினும் திட்டமிட்டுள்ளன. இதற்காக லாக்கீட் மார்ட்டினுக்கு ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாயை நாசா வழங்க உள்ளது. எக்ஸ் பிளேன் எனப்படும் சூப்பர்சோனிக் விமானம் 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் தயாரிக்கப்படும். நிலப்பகுதிக்கு மேல் சூப்பர்சோனிக் […]
விண்வெளி பயணம் என்பது நம்மில் பலரும் எதிர்பார்ப்பது. ஆனால் விண்வெளியில் சொகுசு ஹோட்டலை அமைக்க ஓரியோன் ஸ்பேன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்ஜோஸில் ‘ஸ்பேஸ் 2.0’ மாநாடு நடைபெற்று வருகிறது.இதில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்படுகிறது. இதில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில், வரும் 2021க்குள் விண்வெளியில் சொகுசு ஹோட்டலை திறக்க திட்டமிட்டுள்ளதாக ஓரியோன் ஸ்பேன் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான பயிற்சி மூன்று மாதங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தங்குவதற்கு […]
ஸ்மார்ட்போனில் வரும் மிகப்பெரிய பிரச்சனை சார்ஜ் நிற்கவில்லை என்பதுதான்.பொதுவாக ஸ்மார்ட்போனில் சார்ஜ் ஒரு நல கூட நிற்பதில்லை. அந்த குறையை போக்க வந்துள்ளது பிளாக்வியூ நிறுவனத்தின் P10000 என்ற மாடல். இந்த ஸ்மார்ட்போனில் 11000mAh பேட்டரி திறன் இருப்பதால் இனிமேல் செல்போன் பயனாளிகளுக்கு சார்ஜ் குறித்த கவலை இருக்காது. இந்த போன் குறித்த பிற விவரங்களை பார்ப்போம். இந்த P10000 என்ற மாடல் ஸ்மார்ட்போனில் ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் போது ஒரு வாரத்திற்கு சார்ஜ் இருக்கும். அதுமட்டுமின்றி பயன்படுத்தாமல் […]
நோக்கியா ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் உலகம் முழுவதும் அதிகளவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனை செய்ப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இது நம்பத்தகுந்த மாடல் ஆகும். எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி விரைவில் நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் ஆனது புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் பொறுத்தவரை தற்சமயம் 3ஜிபி ரேம் வசதியுடன் வெளிவந்துள்ளது, ஆனால் எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிவித்த தகவலின் அடிப்படையில் இக்கருவி […]
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவங்களின் ஐபில் கிரிக்கெட் சீசனின் அட்டகாசமான திட்டங்களை தொடர்ந்து, அரசுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமும் அதன் ஐபில் கிரிக்கெட் சீசனின் திட்டமான ரூ.248/-ஐ அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் ஐபில் கிரிக்கெட் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய உதவும் இந்த திட்டத்தின் செல்லுபடி காலமும் 51 நாட்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல்-ன் ரூ.248/- […]
தமிழக அரசின் சார்பில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் புதிய உழவன் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த உழவன் ஆப் வசதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் 2018-2019 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டின் போது துணை முதல்வர், நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் அறிவித்ததன் படி இந்த புதிய உழவன் ஆப் நேற்று விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக அனைத்து விவசாயிகளுக்கும் இந்த ஆப் மிகவும் பயனுள்ள வகையில் […]
ஜிபிஎஸ் PSA மின்சார இயக்கம் உலகில் தனது வியாபாரத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் அது மின்சார வாகனங்களுக்கு அர்ப்பணிக்கப்படும் வர்த்தக அலகு ஒன்றை உருவாக்க முடிந்தது. புதிய அலகு ஒரு உலகளாவிய நோக்கைக் கொண்டிருக்கும், மேலும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை சந்திக்கக்கூடிய மாதிரிகள் வழங்குவதற்கு தேவையான அனைத்து காரணிகளையும் அந்நியப்படுத்தும். குழுவின் மின்சார வாகன மூலோபாயத்தை வரையறுத்து, அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருமாற்றுவதற்கு அது பொறுப்பாகும். அலெக்ஸாண்ட்ரி கின்கார்ட், இந்த நடவடிக்கைகளின் இலாபகரமான வளர்ச்சிக்கான […]
சென்னையில்,யமஹா நிறுவனத்தின் உற்பத்தி நிறுவனத்தில் 1100 கிலோவாட் கூரை மேல் சூரிய மின் உற்பத்தி(solar power plant) நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த புதிய நிறுவனத்தின் சென்னை ஆலையின் மொத்த சூரிய ஆற்றல் 1450 கிலோவாட் வரை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்த கூரைத் திறனை 3500 கிலோவாட் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. புதிய கூரைத் தட்டுகள், தொழிற்சாலை கட்டிடம் பகுதி, உடல் கடை, இயந்திரம் கட்டிடம், பேருந்து நிறுத்தம் மற்றும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான நடைபாதைகள் […]
தமிழ் சினிமாவின் “தல” அஜித்திற்கும் ஆட்டோமொபைல் துறைக்கும் உள்ள சம்மந்தம் பற்றி எல்லோருக்குமே தெரியும், அவர் சினிமா மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ் என்று கலக்கியவர்.அவர் அதில் பல சாதனைகளும் படைத்தார். இந்தியாவில் இருந்து பார்முலா கார் ரேஸில் கலந்து கொண்ட வெகு சிலரில் நடிகர் அஜித்தும் ஒருவர். மேலும் 2003ல் நடந்த பார்முலா ஏசியா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப் என்ற சர்வதேச போட்டியிலும், 2010ல் நடந்த சர்வதேச பார்முலா 2 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 2002ல் […]
இன்று முதல், தொடங்கும் ஐபில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் மைதானங்களில் அதன் 5ஜி சோதனையை நிகழ்த்தவுள்ளதாக, பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் ஐபில் போட்டி தொடங்கி, ஐபில் கோப்பைக்கான இறுதிப்போட்டி நடக்கும் நாள் வரையிலாக அனைத்து மைதானங்களிலும் ஏர்டெல் நிறுவனத்தின் மேசிவ் மிமோ ப்ரீ-5ஜி தொழில்நுட்ப (Massive MIMO Pre-5G technology) சோதனை நடக்கவுள்ளது. டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, மொஹலலி, இந்தூர், ஜெய்ப்பூர், பெங்களூரு மற்றும் சென்னை […]
சியோமி நிறுவனம், ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் அதன் இரண்டாவது முதன்மை ஸ்மார்ட்போன் சார்ந்த பணிகளில் மிக தீவீரமாக ஈடுபட்டுள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதியன்று சியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய பிராண்ட் ஆன பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது . வெளியீட்டு தேதி மட்டுமின்றி சியோமி நிறுவனத்தின் அதிகாரபூர்வமான டீஸர் படம் ஒன்றின் வழியாக, கூறப்படும் பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு சார்ந்த விவரங்களையும் அறிய முடிகிறது. வெளியான டீஸரில், […]