மக்களே எச்சரிக்கை..! உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் டேட்டாக்களை சேகரிக்கும் ஆப்ஸ்..!

Published by
லீனா

ஒரு ஆய்வில் கூகுள் டயலர் மற்றும் மெசேஜஸ் போன்ற பயன்பாடுகளில் இருந்து, நமது டேட்டாக்கள் நமக்கு தெரியாமலே சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

தனியுரிமை மீறல் 

இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே மொபைல் போன் உபயோகிக்கின்றனர். நம்மில் பலர் நாம் உபயோகிக்கும் மொபைல் போன்கள் மூலம், நமது தனியுரிமையை பாதிக்கக் கூடிய பிரச்சனைகள் எவ்வாறு ஏற்படுகிறது, அல்லது இந்த பிரச்னை நமக்கு இருக்கிறதா என்று கூட தெரியாமல் தான் உபயோகித்து வருகின்றனர்.

தனியுரிமை சிக்கல் 

ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களின் தனியுரிமைச் சிக்கல்களை சரி செய்ய கூகுள் முயற்சித்து வருகிறது. இருப்பினும் ஒரு புத்தம் புதிய ஆய்வுக் கட்டுரையானது கூகுள் டயலர் மற்றும் மெசேஜஸ் போன்ற பயன்பாடுகளில் இருந்து, நமது டேட்டாக்கள் நமக்கு தெரியாமலே சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஆய்வு முடிவுகள் 

ஆண்ட்ராய்டில் உள்ள கூகுள் டயலர் மற்றும் மெசேஜஸ் ஆப்ஸ் என்ன தகவல்களை கூகுளுக்கு அனுப்புகிறது? என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. டிரினிட்டி பள்ளியில் கணினி அறிவியல் பேராசிரியராக இருக்கும் டக்ளஸ் லீத் இந்த ஆராய்ச்சியை தொகுத்துள்ளார்.

இதுகுறித்து பேராசிரியர் டக்ளஸ் லீத் கூறுகையில், இந்தப் பயன்பாடுகள் பயனர் தகவல்தொடர்புகள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கின்றன. இதில் செய்திகளின் SHA256 ஹாஷ் மற்றும் அவற்றின் நேர முத்திரை, தொலைபேசி எண்கள், உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புப் பதிவுகள், அழைப்பு காலம் மற்றும் நீளம் ஆகியவை அடங்கும்.

இது பின்னர் Google Play Services Clearcut logger சேவை மற்றும் Firebase Analytics சேவையைப் பயன்படுத்தி Google இன் சேவையகங்களுடன் பகிரப்படுகிறது. ஸ்பேம் வடிகட்டுதல் மற்றும் வணிக அழைப்பாளர் ஐடிகள் போன்ற அம்சங்களை இயக்கி, செய்தி அனுப்புபவர் மற்றும் பெறுநர் அல்லது அழைப்பில் உள்ள இரண்டு சாதனங்களை இணைக்க தரவு நிறுவனத்திற்கு உதவுகிறது.

கூகுள் டயலர் மற்றும் மெசேஜஸ் ஆப்ஸ் இரண்டிலும் எந்தத் தரவு சேகரிக்கப்படுகிறது என்பதை விளக்கும் தனியுரிமைக் கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Recent Posts

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…

7 hours ago

“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

7 hours ago

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…

8 hours ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…

9 hours ago

திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!

சென்னை :  பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…

9 hours ago

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

பீகார் :  மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…

10 hours ago