டிக்கிலோனா படம் குறித்து நடிகர் ஆர்யா படத்தின் ப்ரீமியர் ஷோ-வில் பேசியுள்ளார்.
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா திரைப்படம் வரும் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ஜீ5-ஓடிடி தளத்தில் வெளியாகிறது. படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனகா மற்றும் ஷிரின் காஞ்ச்வாலா இருவரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் இசையமைத்துள்ளார்.
வரும் 10-ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. அந்த ப்ரீமியர் ஷோவை காண நடிகர் சிலம்பரசன், யுவன் சங்கர் ராஜா, ஆர்யா, யோகி பாபு, விஷ்ணு விஷால், ஷிரின் காஞ்ச்வாலா, வைபவ், ஆனந்த் ராஜ் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில், படத்தை பார்த்த ஆர்யா கூறியதாவது ” படம் மிகவும் அருமையாக இருக்கிறது. ஜாலியாக கொண்டு போயிருக்காரு நம்ம இயக்குனர் கார்த்திக் யோகி. சந்தானம் எனக்கு பிடித்த சூப்பர் ஸ்டார். படத்தில் அவருடைய ஸ்டைல், ரொமாண்டிக், காமெடி, எல்லாமே அருமையாக செய்துள்ளார். படத்தின் வசனம் மிகவும் அருமையாக உள்ளது. சந்தானத்தின் சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று” என தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…