கிழக்கு சீனாவில் பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவராகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக ஹோட்டல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பலர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அந்த ஹோட்டல் திடீரென இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அவரசநிலை மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 6 மாடி கொண்ட சின்ஜியா ஹோட்டலில் சில புதுப்பிப்பு வேலைகள் நடந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த ஹோட்டலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 58 பேர் தனிமைப்படுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த இடிப்பாடில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பதற்காக மீட்பு குழுவினர் கடுமையாக போராடி வருகின்றனர். இடிப்பாடில் இருந்து 43 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், இன்னும் 37 பேர் உயிருடன் சிக்கி கொண்டுள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 20 அம்புலன்ஸ்கள், 800க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 750 மருத்துவ ஊழியர்கள் என அனைவரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சரிவுக்கு காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 80,695 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் புதிதாக 70 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,097ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,000 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது என உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…