126 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் திறப்பு – எங்கே தெரியுமா?

Published by
பாலா கலியமூர்த்தி

பாகிஸ்தானில் 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் மீண்டும் பக்தர்களுக்காக நேற்று திறக்கப்பட்டது.

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் ஹைதராபாத்தில் அமைந்துள்ள 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் புதிப்பிக்கப்பட்ட பின்னர் மீண்டும் பக்தர்களுக்காக நேற்று திறக்கப்பட்டது. தற்போது திறக்கப்பட்டுள்ள கோஸ்வாமி புருஷோத்தம் கர் நிஹால் என்று அழைக்கப்படும் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்லவும், சடங்குகள் செய்யவும் வசதியாக அதைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த கோவிலை ஒரு உள்ளூர் இந்து அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் அரசு புள்ளிவிவரத்தின்படி அங்கு சுமார் 75 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர், சிந்து மாகாணத்தில் வசிக்கின்றனர். நாட்டின் மத தளங்களை மேற்பார்வையிடும் பாகிஸ்தானின் பினாமி சொத்து அறக்கட்டளை வாரியம், சமீபத்தில் பல பகுதியில்  கோயில்களை புதுப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, சிறுபான்மை இந்துக்களின் தங்களின் வழிபாட்டுத் தலங்கள் தங்களுக்கு மீட்கப்பட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றி, நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களை மீண்டும் திறக்க பாகிஸ்தானின் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானின் இந்து குடிமக்களுக்கு 400 கோயில்களை மீட்டெடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சியால்கோட் மற்றும் பெஷாவரில் உள்ள 2 வரலாற்று ஆலயங்களுடன் இந்த செயல்முறை தொடங்கியது. சியால்கோட்டில் 1,000 ஆண்டுகள் பழமையான சிவாலய தேஜா சிங் (ஜகந்நாத் கோயில்) இதில் அடங்கும். பெஷாவரில், கோரக்நாத் கோயிலை மீண்டும் திறக்க பாகிஸ்தான் நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. அது ஒரு பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரூ.3,500 கோடி ஊழல் வழக்கில் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பெயர் சேர்ப்பு.!

ரூ.3,500 கோடி ஊழல் வழக்கில் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பெயர் சேர்ப்பு.!

ஆந்திரா : ஆந்திராவில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரும்…

44 minutes ago

இரண்டு நாள் பயணமாக கோவை- திருப்பூர் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், மக்களுடன் கலந்துரையாடவும், திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் பல்வேறு மாவட்டங்களுக்கு…

1 hour ago

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.!

டெல்லி :  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21, 2025) தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 21, 2025…

1 hour ago

“அந்த மனசு தான் சார் கடவுள்”… முத்துக்குமார் குடும்பத்திற்கு பெரிய உதவிய செய்த சிவகார்த்திகேயன்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில்…

14 hours ago

பாமகவிலிருந்து 3 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்! என்ன காரணம்?

சென்னை : பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி,…

16 hours ago

பசிபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

17 hours ago