சீன மாகாணமான ஜெஜியாங்கில் நேற்று டேங்கர் லாரி வெடித்ததில் 19 பேர் உயிரிழிந்தனர் மேலும் 170 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நேற்று வென்லிங் நகருக்கு அருகே, டேங்கர் டிரக் வெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 172 பேர் காயமடைந்தனர் என்று அரசு நடத்தும் பீப்பிள்ஸ் டெய்லி தெரிவித்துள்ளது. ஜெஜியாங் மாகாணத்தின் தைஜோவில் நெடுஞ்சாலை வெளியேறும் இடத்தில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவைக் கொண்டு சென்ற டேங்கர் லாரி வெடித்தது. இந்த குண்டுவெடிப்பினால் தீப்பிழம்புகளையும், புகை மேகத்தையும் வானத்தில் கிளப்பியது.
இந்த லாரி சீனாவின் கிழக்கு கடற்கரையான நிங்போ மற்றும் வென்ஜோ ஆகிய இரு நகரங்களுக்கிடையில் எரிவாயுவைக் கொண்டு சென்று கொண்டிருக்கும்போது வெடித்தது. இந்த விபத்து இரு வழிகளிலும் செல்லும் போக்குவரத்தை நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் அருகிலுள்ள கார்கள் தீப்பிடித்துள்ளது.
விபத்து மற்றும் வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 100 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் 34 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…