சீன மாகாணமான ஜெஜியாங்கில் நேற்று டேங்கர் லாரி வெடித்ததில் 19 பேர் உயிரிழிந்தனர் மேலும் 170 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நேற்று வென்லிங் நகருக்கு அருகே, டேங்கர் டிரக் வெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 172 பேர் காயமடைந்தனர் என்று அரசு நடத்தும் பீப்பிள்ஸ் டெய்லி தெரிவித்துள்ளது. ஜெஜியாங் மாகாணத்தின் தைஜோவில் நெடுஞ்சாலை வெளியேறும் இடத்தில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவைக் கொண்டு சென்ற டேங்கர் லாரி வெடித்தது. இந்த குண்டுவெடிப்பினால் தீப்பிழம்புகளையும், புகை மேகத்தையும் வானத்தில் கிளப்பியது.
இந்த லாரி சீனாவின் கிழக்கு கடற்கரையான நிங்போ மற்றும் வென்ஜோ ஆகிய இரு நகரங்களுக்கிடையில் எரிவாயுவைக் கொண்டு சென்று கொண்டிருக்கும்போது வெடித்தது. இந்த விபத்து இரு வழிகளிலும் செல்லும் போக்குவரத்தை நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் அருகிலுள்ள கார்கள் தீப்பிடித்துள்ளது.
விபத்து மற்றும் வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 100 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் 34 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…