யுனிசெஃப் நேற்று வெளிட்ட ஒரு அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் யேமனில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 2.4 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினிக்குத் தள்ளப்படலாம் என தெரிவித்துள்ளது.
மேலும், யேமனில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஐந்து வயதுக்கு குறைவான 30,000 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறியுள்ளது.
யேமனின் யுனிசெப் பிரதிநிதி சாரா பெய்சோலோ நயந்தி வெளிட்ட அறிக்கையில்,கடந்த ஐந்தாண்டு யுத்தத்தில் பல குழந்தைகளை இழந்துவிட்டோம். மேலும், கொரோனா பரவுவதால் இன்னும் பல குழந்தைகளை இழப்போம் என்று நாங்கள் அஞ்சுகிறோம். எங்களுக்கு அவசர நிதி கிடைக்கவில்லை என்றால், குழந்தைகள் பட்டினியின் விளிம்பிற்கு தள்ளப்படுவார்கள், பலர் இறந்துவிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.
யுனிசெஃப் அறிக்கையில் கிட்டத்தட்ட 9.58 மில்லியன் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நீர், சுகாதாரம் இல்லை எனவும், இதனால் அவர்களுக்கு தொற்று அதிக ஆபத்து உள்ளது என தெரிவித்துள்ளது. யேமனில் இதுவரை 1,089 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 293 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…