உக்ரைன் நாட்டில் ராணுவ விமானம் கீழே விழுந்து நொருங்கியதில் 22 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.
25க்கும் மேற்பட்டோருடன் உக்ரைன் நாட்டில் ராணுவ விமானம் ஒன்று நேற்று பயணம் செய்துள்ளது. அப்போது விமான தளத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் விமானம் சட்டென்று கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இதனால் விமானத்தில் பயணம் செய்த 22 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர், மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். விபத்து குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் உக்ரைனில் ஏற்பட்ட ஒரு விமான விபத்தில் 176 பேர் பலியாகியிருந்தனர். இந்நிலையில் இரண்டாவதாக மீண்டும் இந்த சம்பவம் ஏற்பட்டு உள்ளதால் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…