பாரிஸ் விமான நிலையத்தில் 3 நாளாக தவித்த 300 இந்தியர்கள்.? நீதிபதிகள் அதிரடி உத்தரவு.!

Published by
மணிகண்டன்

ருமேனியாவை தளமாகக் கொண்ட லெஜண்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஏர்பஸ் ஏ-340-வானது கடந்த வியாழன் அன்று ஐக்கிய அரபு நாட்டில் இருந்து அமெரிக்காவில் நிகரகுவா எனும் இடத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 303 பயணிகள் பயணித்துள்ளார். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அதில் 11 சிறார்களும் அடக்கம்.

.24 மணிநேரத்தில் 201 பேர் பலி.! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலிடம் வலியுறுத்தல்.!

இந்த விமானமானது, இடையில் எரிபொருள் நிரப்பும் பொருட்டு பாரிஸில் இருந்து 150 கிமீ தொலையில் வத்ரி எனும் விமான நிலையத்தில் நின்றது. அப்போது அந்த விமானத்தில் சுமார் 300 இந்தியர்கள். அதில் 11 சிறார்கள் துணைக்கு யாருமில்லாமல் இருந்ததை அறிந்துள்ளனர். அவர்கள் அனைவரும் துபாயில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் என்பதும் , தற்போது அமெரிக்கா அல்லது கனடா செல்லல திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக சந்தேகத்தின் பெயரில் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அந்த விமானம் வத்ரி விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. ஒரே நேரத்தில் இதனை பேர் ஒரே விமானத்தில் அதுவும் 11 சிறார்களுடன் அமெரிக்கா செல்ல முனைந்ததை கவனித்த உடன் விமானத்தில் உள்ள சிலர் கடத்தப்பட்டு இருக்கலாம் என விமானத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பெயரில் பிடித்து வைத்துள்ளனர்.

அவர்களிடம் கடந்த 3 நாட்களாக பாரிஸ் நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை நேற்று முழுதாக நிறைவு பெற்று இன்று காலை 10 மணி அளவில் (இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணி) புறப்பட்டு இந்தியா , மும்பை செல்ல பாரிஸ் நீதிபதி உத்தரவி ட்டார்.  3 நாட்களாக விமான நிலையத்தில் சிக்கித் தவித்த பயணிகளுக்கு வத்ரி விமான நிலையத்தில் உணவு மற்றும் சூடான பானங்கள் தவிர, தற்காலிக படுக்கைகள் மற்றும் கழிப்பறைகள் ஆகிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

4 minutes ago

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…

39 minutes ago

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…

58 minutes ago

“உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?” – ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை :  மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

1 hour ago

“போரை தொடங்கிடீங்க..ஆனா நாங்க தான் முடிப்போம்”…அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…

1 hour ago

ஸ்ரீ காந்த் விவகாரம் : “40 முறை போதைப்பொருள் விற்றேன்”..பிரதீப் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago