பிரேசில் நாட்டு கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து – 4 பேர் பலி!

பிரேசில் நாட்டில் கொரோனா சிகிச்சை அளிக்கக் கூடிய நெஸ்டர் பைவா எனும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதுவரை கிட்டத்தட்ட 17 கோடிபேர் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உலகின் பல நாடுகளிலும் தற்போது கொரோனா பாதிப்புகளும் உயிரிழப்பும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையிலும் பிரேசிலில் இதுவரை 1.63 கோடி பேருக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 4.59 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவிலான மொத்த உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் தான் காணப்படுகிறது. பிரேசிலில் உள்ள கிழக்கு மாநிலத்தில் உள்ள நெஸ்டர் பைவா எனும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய மருத்துவமனையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 77 வயது மூதாட்டி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட பொழுது அந்த மருத்துவமனையில் 60 நோயாளிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்று இதுவரை கண்டறியப்படவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025