பிரேசில் நாட்டில் கொரோனா சிகிச்சை அளிக்கக் கூடிய நெஸ்டர் பைவா எனும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதுவரை கிட்டத்தட்ட 17 கோடிபேர் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உலகின் பல நாடுகளிலும் தற்போது கொரோனா பாதிப்புகளும் உயிரிழப்பும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையிலும் பிரேசிலில் இதுவரை 1.63 கோடி பேருக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 4.59 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவிலான மொத்த உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் தான் காணப்படுகிறது. பிரேசிலில் உள்ள கிழக்கு மாநிலத்தில் உள்ள நெஸ்டர் பைவா எனும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய மருத்துவமனையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 77 வயது மூதாட்டி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட பொழுது அந்த மருத்துவமனையில் 60 நோயாளிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்று இதுவரை கண்டறியப்படவில்லை.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…