பாகிஸ்தானில் நான்கு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த 19-ஆம் தேதி தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நான்கு பயங்கரவாதிகளை கொலை செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பலூசிஸ்தானின் அவாரன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இருப்பதை உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் படையினர் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையை மேற்கொண்டபோது, நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷனின் அறிக்கையில், பயங்கரவாதிகளின் மறைவிடமும், ஒரு தளவாட தளமும் அழிக்கப்பட்டன. அதே நேரத்தில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவை மீட்கப்பட்டன. ராணுவ அறிக்கையில் பயங்கரவாதிகளின் தொடர்பு பற்றிய தகவல்களை வழங்கவில்லை. நேற்று வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வஜீரிஸ்தான் பகுதியில் பாதுகாப்புப் படையினர் ஒரு பயங்கரவாத தளபதியையும் மற்ற மூன்று பயங்கரவாதிகளையும் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…