மெக்சிகோவில் உள்ள சுகாதார கிளினிக் ஒன்றில் போலி தடுப்பூசி தயாரித்து 1.5 லட்சத்திற்கு விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தற்பொழுது அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. குறிப்பாக மெக்சிகோவில் இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தற்போது பல்வேறு நாடுகளிலும் கொரோன வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இதை சாதகமாக பயன்படுத்தி மெக்சிகோவில் உள்ள சிலர் போலியாக தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த தடுப்பூசியை 2,000 டாலர், அதாவது இந்திய மதிப்பில் 1.5 லட்சத்துக்கு விற்பனையும் செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு அமைச்சகம் விசாரணை நடத்தி போலி தடுப்பூசி தயாரித்து விற்பனை செய்த 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் கூறுகையில், நியூவோ லியோன் எனும் மாகாணத்தில் தான் இந்த போலி தடுப்பூசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இந்த தடுப்பூசி போட்டுக்கொள்வது அமையும் எனவும் தெரிவித்துள்ள அதிகாரிகள், பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் மட்டும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளானர்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…