9.7 டன் நண்டுகளை ஏற்றி சென்ற ஜப்பான் மீன்பிடி கப்பலுடன் ரஷ்ய கப்பல் மோதியதில், இருவர் காயமடைந்துள்ளதுடன், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவில் 662 டன் எடை கொண்ட ரஷ்ய வணிகக் கப்பலான அமுர் மற்றும் ஜப்பானிய மீன்பிடிக் கப்பலான டைஹாச்சி இரண்டும் மோதிக்கொண்டுள்ளது. இந்த விபத்தில் 9.7 டன் நண்டுகளை ஏற்றி வந்த ஜப்பான் மீன்பிடி கப்பல் கவிழ்ந்து உள்ளது. இதில் அந்த கப்பலில் இருந்த 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இருவர் லேசான காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்து ஹொக்கைடோவில் உள்ள மோன்பெட்சு துறைமுகத்திலிருந்து வடகிழக்கில் 23 கிலோ மீட்டர் தொலைவில் நடந்ததாகவும், காலை 6 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கடும் மூடுபனி இருந்ததாகவும், அதனால் ரஷ்ய கப்பல் சின்ன மீன்பிடி கப்பலை கவனித்திருக்க வாய்ப்பில்லை எனவே இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்து குறித்த முறையான காரணம் என்ன என்பது குறித்து தெரியாத நிலையில் ஜப்பான் கடலோர காவல்படை இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…