கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே அனைத்து குழந்தைகளுக்கும் ஞாபகம் வருவது கிறிஸ்துமஸ் தாத்தா தான்.இதனால் குழந்தைகள் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகை எப்போது வரும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள்.அந்த வகையில் சிறுவன் ஒருவன் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அவர் எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக முகாம் ஓன்று செயல்பட்டு வருகிறது.அந்த முகாமில் 7 வயது நிரம்பிய பிளேக் (Blake) என்ற சிறுவன் உள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நிலையில் இந்த சிறுவன் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கோரிக்கை வைக்கும் விதத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளான்.அந்த கடிதத்தில்,அன்புள்ள சாண்டா,நாங்கள் எங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. என்னுடைய அப்பா சரி இல்லாதவர்.அம்மா கூறுகையில் ,நாம் வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது.பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்கிறேன் என்று கூறினார். நான் பதற்றமாக இருக்கிறேன்.மற்ற குழந்தைகள் மாதிரி நான் பேசவிரும்பவில்லை.இந்த கிறிஸ்துமஸ்க்கு நீங்கள் வருவீர்களா? எங்களிடம் எதுவுமே இல்லை.
நீங்கள் வீட்டிற்கு வரும்போது கொடுப்பதற்கு எதுவும்இல்லை என்றும் வரும்போது கண்டிப்பாக வரும்போது புத்தகங்கள், டிக்சனரி ,காம்பஸ்,வாட்ச் வேண்டும் …எனக்கு நல்ல தந்தையையும் கொண்டு வரவும் என கேட்டுள்ளார்.தற்பொழுது இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…