மியான்மர் ராணுவ ஆட்சிக்கு பின் இதுவரை 740 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

Published by
Rebekal

மியான்மரில் ராணுவ ஆட்சி மாற்றப்பட்டதில் இருந்து இதுவரை 740 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கவிழ்த்து மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கடந்த பிப்ரவரியில் கைப்பற்றியது. இந்நிலையில் ஆங் சான் சூகி அவர்களுடன் சேர்த்து முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்றைய தினம் நள்ளிரவிலேயே கைதுசெய்யப்பட்டு மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. இதனை அடுத்து மியான்மர் மக்கள் மற்றும் உலகின் பல நாடுகளில் உள்ள மக்களும் மியான்மரில் நடக்கக்கூடிய ராணுவ ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தொடர்ச்சியாக மியான்மரில் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் அண்மையில் மியான்மரில் இணைய சேவைகள் முழுவதும் முடக்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வரக்கூடிய இந்த ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய பொதுமக்களை ராணுவங்கள் கொலை செய்தும் வருகின்றன. தொடர்ச்சியாக இந்த சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், இதுவரை மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்ட பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து தற்போது வரை 740க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் மக்கள் போராட்டம் நடத்தும் பொழுது நூற்றுக்கும் அதிகமானோர் தொடர்ச்சியாக கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். மியான்மரில் நடக்கக்கூடிய இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து மக்கள் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

ரோஹித் – கோலி ஓய்வு பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதா? விளக்கம் கொடுத்த பிசிசிஐ!

ரோஹித் – கோலி ஓய்வு பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதா? விளக்கம் கொடுத்த பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…

49 minutes ago

யூடியூப் புதிய விதிகள் : தரமற்ற வீடியோக்களுக்கு இனி காசு இல்லை!

யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது.  இதில் பலர்…

2 hours ago

’பென்ஸ்’ பட ஒளிப்பதிவாளரை திருமணம் செய்யப்போகும் நடிகை தான்யா!

சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…

2 hours ago

த.வெ.கவின் அடுத்த டார்கெட்…கோலாகலமாக நடந்த 2வது மாநாடு பந்தக்கால் நடும் விழா!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…

3 hours ago

நிமிஷா பிரியா வழக்கு : “ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி” – ஏ.பி.அபூபக்கர்!

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…

3 hours ago

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…

4 hours ago