“பாலியல் தொல்லை கொடுத்தவர் தூக்கிலிடப்படவேண்டும்;PSBB பள்ளி மூடப்பட வேண்டும்,” – நடிகர் விஷால் ஆவேசம்…!

Published by
Edison

PSBB பள்ளி மூடப்பட வேண்டும் என்றும்,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் தூக்கிலிடப்படவேண்டும் என்றும் நடிகர் விஷால் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் என்பவர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது.அதாவது,மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து,மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில்,இதுகுறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”PSBB பள்ளி ஆசிரியரால் நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் என்னை பயமுறுத்துகிறது.பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் ஒருமுறை கூட மன்னிப்பு கேட்காத PSBB பள்ளி மூடப்பட வேண்டும்.இதுபோன்ற குற்றங்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

மேலும்,பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர் தூக்கிலிடப்படவேண்டும்.அப்போதுதான்,எதிர்காலத்தில் மற்ற ஆசிரியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

எனவே,கடுமையான நடவடிக்கை எடுக்க எனது நண்பர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மஹேஷ் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்”,என்று பதிவிட்டிருந்தார்.

Published by
Edison

Recent Posts

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

28 minutes ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

54 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

3 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

4 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

4 hours ago