கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிவதாக நடிகை சமந்தா அறிவிப்பு…!

Published by
Rebekal

கணவர் நாக சைதன்யாவை விட்டு தான் பிரிவதாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தெலுங்கு திரையுலகிலும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் தெலுங்கு திரை உலகின் வாரிசு நடிகராகிய நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்து வந்தனர். பின் இரு குடும்பத்தினரின் சம்மதத்தோடு கடந்த 2017 ஆம் ஆண்டு கோலாகலமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

தனது கணவருடன் மகிழ்ச்சியாக இருந்த சமந்தா, திருமணத்திற்கு பின்பதாகவும் தமிழ், தெலுங்கு என இரு மொழி திரைப்படங்களிலும் சமந்தா நடித்து வந்தார். இதற்கிடையில் அவரது கணவருக்கும் சமந்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

மேலும் இதை இருவருமே மறுக்கவில்லை. அதே போல அண்மையில் நடைபெற்ற நாக சைதன்யாவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கூட சமந்தா கலந்து கொள்ளாதது ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கியது. மேலும், ஏற்கனவே பேசப்பட்டு வந்த விவாகரத்து குறித்த செய்தி மேலும் பரவியது. இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது பிரிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நாங்கள் பல விவாதங்கள் மற்றும் யோசனைக்கு பின்பதாக கணவன் மனைவி எனும் உறவில் நீடிக்கப்போவதில்லை என முடிவு எடுத்திருக்கிறோம். ஆனால், எங்கள் உறவின் முக்கிய அம்சமாக இருந்த நட்பு எங்களுக்குள் முன்பு இருந்தது போல எப்பொழுதும் தொடரும். இந்த கடினமான காலகட்டத்தில் எங்கள் முடிவுகளுக்கு ரசிகர்கள், ஊடகங்கள் ஆதரவு கொடுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

3 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

4 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

5 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

6 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

7 hours ago