அழுத்தத்தில் அதிமுகவா??செப்.,28ல் செயற்குழுக்கூட்டம்!

Published by
Kaliraj

செப்.28 அன்று அதிமுக செயற்குழுக் கூட்டம்  நடைபெறும் என்று ஓபிஎஸ்  ஈபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல், சசிகலா விடுதலை, மாவட்டங்கள் பிரிப்பு, பாஜகவுடனான கூட்டணிப் பிரச்சினை, முதல்வர் வேட்பாளர் என்ற அடுக்கடுக்கான சர்ச்சை என்று அதிமுகவில் பல பிரச்சினைகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் எழுப்பிய நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதன் பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை (18.9.2020 – வெள்ளிக்கிழமை) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மூத்த தலைமைக் கட்சி நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக செயற்குழுக் கூட்டம் வரும் செப்.,28 காலை 9.45 மணி அளவில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும் கூட்டத்திற்கான அழைப்பிதழ் செயற்குழு உறுப்பினர்களுக்குத் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிமுக அரசியலில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இக்கூட்டம் முக்கியமானது என்றும் கட்சியில் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல்  விமர்சகர்கள் நோக்குகின்றனர்.

Published by
Kaliraj

Recent Posts

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

8 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

47 minutes ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago