சிவகுமார், சூர்யா மீது வழக்கு போட எனக்கு விருப்பமேயில்ல! இயக்குனர் அமீர் பேச்சு!

Published by
பால முருகன்

பருத்திவீரன் பட சமயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், இத்தனை வருடங்கள் கடந்தும் இன்னும் அந்த பிரச்சனை முடிந்த பாடு இல்லை. தன்னிடம் இருந்து பருத்திவீரன் படத்தை மிரட்டி வாங்கிவிட்டதாகவும், தனக்கு ஞானவேல் தயாரிப்பிலிருந்த்து பணத்தை பெற்று தரும்படியும் அமீர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டார்.

அந்த வழக்கும் இன்னும் நிலுவையில் தான் இருந்து வருகிறது. இதனையடுத்து, ஞானவேல் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் அமீர் பணத்தை ஏமாற்றி சம்பாதிப்பதாக குற்றம் சாட்டி பேசி இருந்தார். இதனால் இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்த நிலையில், அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், சினேகன், கஞ்சா கருப்பு ஆகியோர் பேசினார்கள்.

வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது!ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சமுத்திரக்கனி!

இந்த விவகாரம் குறித்து அமீர் பற்றி பேசியதற்கு தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் ஞானவேல் ராஜா கூறியிருந்தார். இருந்தாலும் சரியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள். இதற்கிடையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் அமீர் இந்த விவகாரத்தில் தான் வழக்கு தொடரும் போது சிவகுமார், சூர்யா பெயரை கொடுக்கவேண்டாம் என்று தான் இருந்ததாக கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய இயக்குனர் அமீர் ” முதலில் இந்த வழக்கு நான் போடும்போது என்னுடைய விருப்பம் இல்லாமல் சிவகுமார் சார் மற்றும் சூர்யா  பெயரை என்னுடைய வக்கீல் சேர்த்துக்கொண்டார். நான் அவர்களுடைய பெயரை போடவே வேண்டாம் என்று தான் சொன்னன். எனக்கு அவர்கள் இருவருடைய பெயரை போட கூடிய விருப்பமும் இல்லை.

இந்த விவகாரத்தில் அவர்கள் இரண்டு பேரும் இல்லை அவர்களுடைய பெயரை சேர்க்காதீர்கள் என்று நான் சொன்னேன். ஆனால் வக்கீல் வேறு வழி இல்லை என்று அவர்களுடைய பெயரை சேர்த்தார்கள். வக்கீல் எடுத்த அந்த முடிவு தான் அடுத்த நாளில் பத்திரிகை செய்தியாக மாறியது. பத்திரிகை செய்தியாக மாறிய பிறகு அவர்கள் நான் தான் திட்டமிட்டு அவர்களுடைய பெயரை சேர்த்ததாக நினைத்தார்கள்.

அமீர் அண்ணனை ஏமாத்திட்டாங்க! கொந்தளித்த கஞ்சா கருப்பு!

பிறகு நீதிபதியே இந்த விவகாரத்தில் சூர்யா, சிவகுமார் பெயர் கிடையாது அவர்களுடைய பெயரை சேர்க்கவேண்டாம் இருவருடைய பெயரை எடுத்துவிட்டு வழக்கு தொடருங்கள் என்று கூறினார். வக்கீல் பேச்சை கேட்டதால் தான் நான் குற்றவாளியாக மாறிவிட்டேன். என்னுடைய பேச்சை கேட்டு இருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்து இருக்காது” எனவும் இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

Recent Posts

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

12 minutes ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

38 minutes ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

2 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

2 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

4 hours ago

கூட்டணி ஆட்சி வேண்டும் என நான் விரும்பவில்லை…மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு!

சென்னை :  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…

5 hours ago