ரஷ்யாவில் ராணுவ ஜெட் என்ஜின் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

ஜெட் என்ஜின் மூலமாக ரஷ்யாவில் கிருமி நாசினிதெளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி உலக நாடுகளை மிரட்டி வருகிறது.இதனால் அனைத்து நாடுகளும் கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதேபோல் ரஷ்யாவில் கொரோனா தொற்றால் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆனாலும் ரஷ்யாவில் உள்ள செல்யாபின்ஸ் என்ற பகுதியில் ஜெட் என்ஜின்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.கொரோனா பரவலை தடுக்கவும்,ஒழிக்கவும் நகர பகுதிகளில் ஊழியர்கள் போர் விமான என்ஜின்கள் மூலமாக கிருமி நாசினியை தெளித்து வருகின்றனர்.