தமிழ்சினிமாவில் மாஸ் & கிளாஸ் இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உருவாகி ரிலீசாகாமல் இருந்து வந்தன.
தற்போது வேல்ஸ் நிறுவனம் முன்வந்து தனுஷ் நடிப்பில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தினை வாங்கி வரும் 29ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து வேல்ஸ் நிறுவனத்திற்கு மூன்று படங்களை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளார்.
இதில் முதல் படமாக வருண் நாயகனாக நடித்து வரும் ஜோஸ்வா எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து, அனுஷ்காவை வைத்து ஹீரோயின் மையம் கொண்ட ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் வில்லியாக நடிக்க வைக்க பிக் பாஸ் புகழ் அபிராமி வெங்கடாச்சலத்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். இவர் ஏற்கனவே தல அஜித் நடித்து இருந்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…