சூப்பர் ஸ்டார் நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ஷங்கர் என பலர் கலந்துகொண்டனர்.
அப்போது படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பேசுகையில், ‘ படத்தில் வேலை பார்த்த தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி பெருமையாக குறிப்பிட்டார். அதிலும் குறிப்பாக படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் மிகவும் சிறப்பாக திரைப்படம் வரவேண்டும் என தேவையான காட்சிகளை கேட்டு வாங்கி படத்தொகுப்பை மேற்கொண்டார். எனவும், படத்தின் கலை இயக்குனர் சந்தானம் அவர்கள் நான் என்ன நினைத்தேனோ அதனை செட் போட்டு கொடுத்தார். எனவும் குறிப்பிட்டார்.
சண்டை காட்சி இயக்குனர்கள் அன்பறிவு மாஸ்டர்கள் சிறப்பாக சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளனர். அதிலும், குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பாக நடித்துள்ளார். டூப் ஏதுமில்லாமல் நன்றாக நடித்துள்ளார். 15 வருடங்களுக்கு முன்னதாக ரஜினி எப்படி இருந்தாரோ அப்படியேதான் இந்த படத்திலும் மிகச் சிறப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். என பெருமையாக பேசினார். அவரை தியேட்டரில் காண தேடி ஓடி அலைந்த காலம் மாறி தற்போது அவரை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன். இதனை என்னால் நம்பவே முடியவில்லை. என நெகிழ்ச்சியாக தனது உரையை பேசி முடித்தார்
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…