கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாக ஒதுக்கப்பட்டிருந்த பீஜிங் நகர் மருத்துவமனை இன்று மூடப்பட உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் உள்ள உகைன் நகரில்தான் உருவாகியது. இந்நிலையில், சீனாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு சார்ஸ் எனும் வைரஸ் நோய் தாக்கியவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதற்காக பீஜீங் நகரில் சியோடாங்ஷன் என்ற பெயரில் தனியான ஒரு ஆஸ்பத்திரி உருவாக்கப்பட்டது.
அதன் பின்பு அந்த ஆஸ்பத்திரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவிய கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திறக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து புதன்கிழமை இன்று முதல் அந்த மருத்துவமனை மூடப்பட உள்ளதாக மருத்துவ துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உகைன் நகரில் கொரோனா நோய் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட 16 மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகளும் ஞாயிற்றுக்கிழமை குணமாகி வீடு திரும்பியதை அடுத்து 16 மருத்துவமனைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவில் மேலும் ஆறு பேருக்கு புதியதாக கொரோனா வந்திருப்பதாகவும், இதுவரை 40 பேருக்கு மீண்டும் கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…