கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாக ஒதுக்கப்பட்டிருந்த பீஜிங் நகர் மருத்துவமனை இன்று மூடப்பட உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் உள்ள உகைன் நகரில்தான் உருவாகியது. இந்நிலையில், சீனாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு சார்ஸ் எனும் வைரஸ் நோய் தாக்கியவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதற்காக பீஜீங் நகரில் சியோடாங்ஷன் என்ற பெயரில் தனியான ஒரு ஆஸ்பத்திரி உருவாக்கப்பட்டது.
அதன் பின்பு அந்த ஆஸ்பத்திரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவிய கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திறக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து புதன்கிழமை இன்று முதல் அந்த மருத்துவமனை மூடப்பட உள்ளதாக மருத்துவ துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உகைன் நகரில் கொரோனா நோய் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட 16 மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகளும் ஞாயிற்றுக்கிழமை குணமாகி வீடு திரும்பியதை அடுத்து 16 மருத்துவமனைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவில் மேலும் ஆறு பேருக்கு புதியதாக கொரோனா வந்திருப்பதாகவும், இதுவரை 40 பேருக்கு மீண்டும் கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…