BIGG BOSS 5 : தாமரை சொல்றதை கேட்கவும், பார்க்கவும் கேவலமா இருக்கு …!

தாமரை உன்னை பற்றி சொல்வதை கேட்கவும், பார்க்கவும் கேவலமா இருக்கு என ப்ரியங்காவிடம் அபிஷேக் கூறியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், பிரியங்காவிற்கும் தாமரைக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் டாஸ்கில் இருந்து அவ்வப்போது சற்று வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், உன்னை பார்த்து தாமரை சொல்வது அனைத்தும் கேட்கவும் பார்க்கவும் கேவலமாக இருக்கிறது என அபிஷேக் பிரியங்காவிடம் கூறியுள்ளார். அதற்கு பிரியங்கா நான் மற்றவர்களுக்கு என்னை நிரூபிப்பதற்காக இங்கு வரவில்லை என பிரியங்கா அபிஷேக்கிடம் கூறியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!
June 28, 2025