மாநிலங்களவையில் பாரதிய ஜனதாவின் பலமானது தற்போது 86 ஆக உயர்ந்து உள்ளது.மேலும் காங்கிரசின் பலம் ஆனது 41 ஆக குறைந்துள்ளது இது குறித்த செய்தியின் விவரம் இதோ:
மாநிலங்களவையில் நடப்பாண்டிற்கான காலியான 61 இடங்களுக்கு தேர்தல் ஆனது அறிவிக்கப்பட்டது. அதில் 42 உறுப்பினர்கள் மார்ச் மாதத்திலேயே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மீதமுள்ள 19 இடங்களுக்கான தேர்தல் நாட்டை உலுக்கி எடுத்து வரும் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
இந்த 19 இடங்களுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. 8 மாநிலங்களில் நடந்த தேர்தலில் பாஜக 8 இடங்களை வென்றது. அதே போல காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவை தலா 4 இடங்களை தங்கள் தரப்பில் பெற்றன.
ஒட்டுமொத்த 61 இடங்களில் பாரதிய ஜனதா 17 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. இதன் மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலமானது 86 ஆக உயர்ந்திருக்கிறது. எதிர்தரப்பில் உள்ள காங்கிரசின் பலம் 41 ஆக குறைந்து உள்ளது. மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 இடங்களில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் சதமடித்து 100யைத் தொட்டுள்ளது.
இதைத்தவிர பா.ஜனதாவுடன் நட்பில் இருந்த வரும் அ.தி.மு.க., பிஜூ ஜனதாதளம் ஆகிய கட்சிகள் தலா 9 இடங்கள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 6 உறுப்பினர்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.சதமடித்துள்ள ஆளும் கட்சியான பாஜக மசோதாக்களை மாநிலங்களவையில் எவ்வித சிக்கலும் இன்றி நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் வாய்மொழியாக எடுத்துரைக்கின்றனர்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…