அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் கீ வெஸ்ட் பகுதியில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அந்த படகில் இருந்த 2 பேர் பலியானதுடன், 10 பேர் மாயமாகி உள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள தென் கிழக்கு பகுதியான புளோரிடா மாகாணத்தில் கீ வெஸ்ட் பகுதியில் சென்று கொண்டிருந்த படகு ஒன்று நேற்று மதியம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து படகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கிய நிலையில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் கடலோர காவல் படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து படகில் இருந்த பயணிகளில் மேலும் 10 பேர் காணவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது காணாமல் போன 10 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, மேலும் இந்த படகு எந்த வகை படகு என்பது பற்றியோ அல்லது படகில் பயணித்த நபர்கள் யார் என்பது பற்றியோ எங்கிருந்து, எதற்காக வந்தார்கள் என்பது பற்றியோ எந்த ஒரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…