பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரன்பீர் கபூர் .இவர் நடிகர் ரிஷி கபூர் மற்றும் நீது கபூரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் இவர் நடிகை ஆலியா பட்டை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.இவர் அமிதாப் பச்சனுடன் இணைந்து பிரம்மஸ்திரா படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது தாயார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அவர் பகிர்ந்த பதிவில்,உங்கள் அக்கறைக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி . ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது உடல்நலம் முன்னேறி வருவதாகவும் நீது கபூர் தெரிவித்துள்ளார்.கடந்தாண்டு நீது கபூர் கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தது குறிப்பிடத்தக்கது .தற்போது அவரது ரசிகர்கள் விரைவில் மீண்டு வர வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…