தொழிலதிபர் விஜய் மல்லையா திவாலாகிவிட்டார் – லண்டன் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு தொடந்த வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா திவாலானதாக அறிவித்து லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

தொழிலதிபர் விஜய் மல்லையா திவாலானதாக அறிவித்து லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தலைமையிலான இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு தொடந்த வழக்கு வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மல்லையாவின் செயல்படாத கிங்பிஷர் ஏர்லைன்ஸுக்கு வழங்கப்பட்ட கடனை திரும்ப மீட்டெடுப்பது எளிதாகியுள்ளது.

லண்டன் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, மல்லையாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்வதற்கு வழிவகுக்கிறது. ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதாக மல்லையா கூறிய நிலையில், அதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டது.

கடந்த மே மாதம் காணொளி வாயிலாக நடத்தப்பட்ட விசாரணையில் வங்கிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திவால் மனுவை உயர் நீதிமன்ற உறுதி செய்தது. இது மனுவானது 2018-ல் தாக்கல் செய்யப்பட்டதாகும். இந்தியாவில் விஜய் மல்லையா கடன் பெறுவதற்கு ஈடாக சொத்துகள் வைத்துள்ளதாகக் கூறி நீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது.

தவிர்க்க முடியாத சூழலில் 65 வயதாகும் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டதாக வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்தது. விஜய் மல்லையா இங்கிலாந்தில் ஜாமீனில் இருக்கிறார். ஆனால், வெளிநாட்டு தொடர்பான நடைமுறைகளில் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. அதே நேரத்தில் மல்லையா இங்கிலாந்து அரசிடம் ரகசியமாக தஞ்சம் கோரியிருந்ததும் சட்டரீதியில் பிரச்சினையாக இருந்தது என்பதும் குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, பாரத ஸ்டேட் வங்கி கூட்டமைப்பில் பாங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, பெடரல் வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், யூகோ வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, ஜேஎம் பைனான்சியல் அசெட் ரிகன்ஸ்ட்ரக் ஷன் உள்ளிட்ட 13 நிதி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கை நடத்தி வருகின்றன.

கடன் சர்ச்சைக்குரியதாக இருப்பதாகவும், இந்தியாவில் நடந்து வரும் நடவடிக்கைகள் இங்கிலாந்தில் திவால்நிலை உத்தரவைத் தடுப்பதாகவும் மல்லையாவின் சட்டக் குழு நீதிமன்றத்தில் வாதிட்டது. கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி முதல் வழங்கப்பட்ட கடனுக்கு 11.5% வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு, கூட்டு வட்டியும் சேர்த்து வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…

43 minutes ago

கோவா கோயில் திருவிழா.., கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…

2 hours ago

எல்லை மீறும் பாகிஸ்தான்., 9வது நாளாக தொடரும் காஷ்மீர் எல்லை தாக்குதல்!

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

2 hours ago

Live : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…

3 hours ago

கோவா கோயில் துயரம்.. முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் ஆய்வு.!

கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…

4 hours ago

வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று பெங்களூருடன் மோதல்.!

பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…

4 hours ago