நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கோவளம் பகுதி மக்களை நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பிரகாஷ் ராஜ் பவுண்டேஷன் முலம் தங்க வைத்து உணவு வழங்கி உதவியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வில்லனாகவும்,துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாக திகழ்பவர்.சினிமாவில் வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ரியல் ஹீரோவாக வலம் வருகிறார் .ஆம் பல ஏழை எளிய மக்களுக்கு உதவும் இவர் தற்போது நிவர் புயலால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை தனது பவுண்டேஷன் மூலம் தங்க வைத்து உணவு வழங்கி உதவியுள்ளார்.
நிவர் புயலானது இன்று அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்தது .அதன் முன்னதாக நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகள் உட்பட தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.
அந்த வகையில் சென்னையில் உள்ள கோவளத்தின் கடலோர பகுதியில் வசிக்கும் மக்களை நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பிரகாஷ் ராஜ் பவுண்டேஷன் முலம் தங்க வைத்து உணவு வழங்கி உதவி செய்துள்ளார்.அதற்கான புகைப்படங்களையும் , வீடியோக்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரகாஷ் ராஜ்,என்னை சுற்றியிருக்கும் ஒரு சிலராவது தூங்குகிறார்கள் என்று உறுதி செய்த பின்னர் ,இப்போது தான் என்னால் தூங்க முடியும் என்று பதிவிட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே கொரோனா சூழலில் பல ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதிகள் வழங்கி உதவியதுடன்,இலவச கழிப்பிடங்களை பள்ளிகளுக்கு செய்து கொடுத்தும் , பட்டியலின மாணவியை வெளிநாட்டில் அனுப்பி படிக்க வைத்து அனைத்து செலவுகளையும் ஏற்று கொண்டது என பல உதவிகளை தனது பிரகாஷ் ராஜ் பவுண்டேஷன் முலம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…