நிவர் புயலால் பாதிக்கப்பட்ட சென்னைவாசிகள்.!தங்க வைத்து உணவு வழங்கிய நடிகர் பிரகாஷ்ராஜ்.!

Published by
Ragi

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கோவளம் பகுதி மக்களை நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பிரகாஷ் ராஜ் பவுண்டேஷன் முலம் தங்க வைத்து உணவு வழங்கி உதவியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வில்லனாகவும்,துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாக திகழ்பவர்.சினிமாவில் வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ரியல் ஹீரோவாக வலம் வருகிறார் .ஆம் பல ஏழை எளிய மக்களுக்கு உதவும் இவர் தற்போது நிவர் புயலால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை தனது பவுண்டேஷன் மூலம் தங்க வைத்து உணவு வழங்கி உதவியுள்ளார்.

நிவர் புயலானது இன்று அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்தது .அதன் முன்னதாக நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகள் உட்பட தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

அந்த வகையில் சென்னையில் உள்ள கோவளத்தின் கடலோர பகுதியில் வசிக்கும் மக்களை நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பிரகாஷ் ராஜ் பவுண்டேஷன் முலம் தங்க வைத்து உணவு வழங்கி உதவி செய்துள்ளார்.அதற்கான புகைப்படங்களையும் , வீடியோக்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரகாஷ் ராஜ்,என்னை சுற்றியிருக்கும் ஒரு சிலராவது தூங்குகிறார்கள் என்று உறுதி செய்த பின்னர் ,இப்போது தான் என்னால் தூங்க முடியும் என்று பதிவிட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே கொரோனா சூழலில் பல ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதிகள் வழங்கி உதவியதுடன்,இலவச கழிப்பிடங்களை பள்ளிகளுக்கு செய்து கொடுத்தும் , பட்டியலின மாணவியை வெளிநாட்டில் அனுப்பி படிக்க வைத்து அனைத்து செலவுகளையும் ஏற்று கொண்டது என பல உதவிகளை தனது பிரகாஷ் ராஜ் பவுண்டேஷன் முலம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Ragi

Recent Posts

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

9 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

49 minutes ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

59 minutes ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

1 hour ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

3 hours ago