அனைத்து பூஜைகளிலும் முக்கிய பொருட்களாக தேங்காய், வாழைப்பழம் இருப்பதன் காரணம் என்ன?!

Published by
மணிகண்டன்
  • நம் வீட்டிலோ, கோவிலிலோ பூஜை செய்தால் கடவுளுக்கு கட்டாயம் தேங்காய், வாழைப்பழம் படைக்கிறோம்.
  • அதில் ஓர் காரணம் அவ்விரண்டையும் போல மறு பிறவு வேண்டாம் என கடவுளிடம் வேண்டுவது போல ஆகும்.

நம் வீட்டு பூஜை ஆனாலும் சரி, கோவில் சென்று வழிபடுவது என்றாலும் சரி நமது பூஜை தட்டில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும் பொருள் தேங்காய் மற்றும் வாழைபழம் ஆகும். இவ்விரண்டையும் நாம் படைப்பதற்கு காரணம் இவைதான்,

அதாவது, வாழைப்பழத்திற்கு கொட்டை கிடையாது. அதாவது மற்ற அனைத்து பழங்களுக்கும் கொட்டை இருக்கும். அவை நாம் சாப்பிட்டு போட்டால் வளர்ந்துவிடும். ஆனால் வாழைப்பழத்தை அப்படியே புதைத்தாலும் வளராது.

அதே போல தான் தேங்காயையும் அப்படியே புதைத்தால் வளராது. இவை இரண்டையும் நாம் கடவுளுக்கு படைப்பது எதற்கென்றால் இவை இரண்டையும் போல மறு பிறவி இல்லாத வரம் வேண்டும். அடுத்த பிறவி வேண்டாம் என கடவுளிடம் நாம் மறைமுகமாக வேண்டிக்கொள்கிறோம்.

மற்ற பழங்கள் நாம் தின்று போட்ட கொட்டைகளில் இருந்து மரம் வளர்ந்து அதன் மூலம் பழம் கிடைத்து அதனை சாமிக்கு படைத்தால் அது எச்சில் பழம் போல கருதப்படும். ஆனால் வாழைமரமும், தென்னை மரமும் பழத்தின் மூலம் வளருவதில்லை. மாறாக அவை வாழைக்கன்னு, தென்னங்கன்னு மூலமாக வளரும்.ஆதலால் தான் வாழைப்பழமும், தேங்காயும் பூஜை பொருட்களில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Recent Posts

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

1 hour ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

2 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

3 hours ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

4 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

4 hours ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

7 hours ago